அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சிம்மம் 01.01.2011 TO 31.12.2011

Go down

சிம்மம் 01.01.2011 TO 31.12.2011  Empty சிம்மம் 01.01.2011 TO 31.12.2011

Post by Admin Sat Jan 01, 2011 9:02 am

தலைமை தாங்கும் ஆற்றலும் எப்பொழுதும் முன்னிலை வகிக்கும் உங்களுக்கு புத்தாண்டு நற்பலன்களை அளிக்க வல்லதாகும் . உங்களது புகழ் கூடும் . எதிர்பார்த்த காரியங்கள் கைகூடும் எப்பொழுதும் வெற்றியுடனும் செயல்படுவீர்கள் . பேச்சில் சாமர்த்தியம் கூடும் . ஆரம்ப கல்வி பயில்பவர்கள் எளிதில் வெற்றி அடைவர் . தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் பணத்தை நல்ல வழியில் செலவு செய்வீர்கள் . சுபச்செலவுகள் கூடும் . மற்றவர்களிடம் பேசும் பொழுதும் உடன் பணிபுரிவோர்களிடம் பேசும் பொழுதும் மேல் அதிகாரிகளிடமும் கவனமாக நடந்து கொள்ளல் வேண்டும் . இல்லையேல் நாம் பேசும் பேச்சே விபரீதமாக அமையும் .
அடிக்கடி பிரயாணம் செய்ய சந்தர்ப்பம் அமையும் . புதிய செயல்களில் ஈடுபட வெற்றி கிட்டும் . எதிர்பார்த்த செய்திகள் சற்று தாமதமானாலும் இறுதியில் வெற்றி கிட்டும் . உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் நன்மை ஏற்படும் . மேலும் உறவினர்களாலும் நன்மை ஏற்படும் . புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமும் திறமையும் அதிகரிக்கும் . அடிக்கடி நேர்முகத்தேர்வு , போட்டித்தேர்வுகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் . தாயாரை விட்டு பிரிய நேரிடும் . தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை .

ஒரு சிலருக்கு பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்க சந்தர்ப்பம் அமையும் . வீடு , மனை , வண்டி வாகனங்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் . அடிக்கடி நல்ல ஆடைகள் வாங்கவும் ஆபரணங்கள் வாங்கவும் சந்தர்ப்பம் அமையும் . நல்ல கல்வி ஏற்படும் . தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவும் எதிர்பார்த்த கல்லூரிகள் அமையவும் வாய்ப்பு ஏற்படும் . அதே சமயம் நன்கு உழைத்தால் மட்டுமே வெற்றி கிட்டும் . இல்லையேல் மயிரிழையில் தோல்வியை தழுவ நேரிடும் . படிப்பில் மிக அதிக கவனம் தேவை . வேலையில் ஒரு சிலருக்கு பிரச்சனைகள் ஏற்படும் . எனவே வேலையில் கவனமுடன் செயல்படுதல் வேண்டும் .

காதல் விஷயங்கள் ஒரு சிலருக்கு வெற்றியும் , அது திருமணத்திலும் போய் முடியும் . ஒரு சிலருக்கு காதலால் அசிங்கம் அவமானப்படவும் நேரிடும் . எனவே எச்சரிக்கை தேவை . குழந்தை இல்லாதவர்கள் தெய்வ அனுகூலத்தை கூட்டவும் . அப்பொழுதுதான் குழந்தை பாக்கியம் கிடைக்கும் . பங்குச்சந்தையில் முதலீடு செய்வதில் அதிக கவனம் தேவை. தேவையில்லாமல் பெரிய அளவில் முதலீடு கூடாது . எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போக வாய்ப்பு உண்டு . கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ஆரம்பத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் பின்னால் நல்ல புகழும் வருமானமும் அந்தஸ்தும் அதிகரிக்கும் . அரசியலில் இருப்பவர்கள் கடுமையான போட்டியை சந்திக்க வேண்டி வரும் . எதிர்பார்த்த வெற்றியை பெற வலுவாக போராட வேண்டி வரும் . சமூக சேவைகள் செய்பவர்கள் சமூகத்தில் பெயர் புகழுடன் விளங்குவர் .

இதுவரை வேலை தேடுவதையே வேலையாக கொள்பவர்களுக்கு நல்ல வேலை அமையும் . நல்ல உத்தியோகமும் அதற்கேற்ற நல்ல சம்பளமும் கிடைக்கும் . புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வேலை எளிதில் கிடைக்கும் என்றாலும் பார்க்கும் வேலையை விடுவதில் மிக அதிக கவனமாக இருத்தல் வேண்டும் . உத்தியோக உயர்வும் ஊதிய உயர்வும் கிட்டும் . ஒரு சிலருக்கு வேலையின் நிமித்தமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும் . கொடுத்த பணம் திரும்ப கிடைப்பதில் சற்று தாமதம் ஆனாலும் சிறிது சிறிதாக அந்த பணம் வந்து சேரும் . கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும் . புதிய கடனை வாங்கி பழைய கடனை அடைக்க நேரிடும் . போட்டி மற்றும் பந்தைய தேர்வுகளில் வெற்றி பெற சந்திர்ப்பம் அமையும் .உடல் ஆரோக்கியத்தில் மிக கவனம் தேவை .கண் ,வயிறு , முழங்கால் , கழுத்து, போன்ற உடலின் அவயங்களில் பிரச்சனை ஏற்பட்டு விலகும் .

திருமணம் தள்ளிபோனவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும் வழக்குகள் எதிர்பார்த்த வெற்றியை தராது . போக்குவரத்து வண்டி வாகனங்களில் மிகவும் கவனமுடன் நடந்து கொள்ளவும் . எதிர்பாராத தனவரவு ஒரு சிலருக்கு அமையும் . மனைவி மூலம் பொருள்வரவு அல்லது முன்னோர்களின் தனவரவு கிடைக்கும் . அடிக்கடி தெய்வ தேவாலய தரிசனங்கள் கிடைக்கும் . ஒரு சிலருக்கு அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்பு அமையும் . ஒரு சிலருக்கு தாய் மாமன்களால் எதிர்பார்த்த அன்பும் ஆதரவும் கிட்டும் . நண்பர்களால் பொருள் உதவி கிட்டும் .

விவசாயம் எதிர்பார்த்த லாபத்தை தரும். மேலும் மருத்துவம் , பொறியியல் , சிமிண்ட் , மருந்து இரசாயனம் , நகை , ஜவுளி , எலெக்ட்ரிக்கல் , எலெக்ட்ரானிக்ஸ் , அழகு சாதன பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள் லாபம் அடைவர் .

அரசுத்துறை , நிதித்துறை , நீதித்துறையில் இருப்பவர்கள் அணு ஆராய்ச்சி , ஆடிட்டர் தொழில் புரிபவர்கள் மற்றும் போலீஸ் , இராணுவம் இவற்றில் பணி புரிபவர்கள் தங்களது தொழில்களில் மேலான கவனத்தை செலுத்துதல் வேண்டும் .

ஓட்டல் , போக்குவரத்து , தகவல்துறை , கம்ப்யூட்டர் , சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் எலக்ட்ரிக்கல் , எலெக்ட்ரானிக்ஸ் துறையில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவர் . சிறுதொழில் மற்றும் குறுந்தொழில் புரிபவர்கள் எதிர்பார்த்த லாபம் அடைவர் . ஏற்றுமதி , இறக்குமதி தொழில் செய்பவர்கள் ரியல் எஸ்டேட் , லாட்ஜ் மற்றும் மருத்துவமனை நடத்துபவர்கள் லாபம் பெறுவர் .

எம்பெருமான் சிவனை வணங்கிவருவதன் மூலமும் ஹோமம் மற்றும் பாராயணங்கள் செய்வதின் மூலமும் நற்பலன் அதிகரிக்கும் .
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum