அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சூதாட்டத்தில் ஈடுபட்ட ஜெயவர்தனா

Go down

சூதாட்டத்தில் ஈடுபட்ட ஜெயவர்தனா Empty சூதாட்டத்தில் ஈடுபட்ட ஜெயவர்தனா

Post by theepan Thu Mar 03, 2011 6:27 am

சூதாட்டத்தில் ஈடுபட்ட ஜெயவர்தனா Jeyawardena_001பாகிஸ்தானுக்கு எதிரான உலக கிண்ணப் போட்டியில் ஜெயவர்தனா சூதாட்டத்தில் ஈடுபட்டார் என இலங்கை தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதிய உலக கிண்ண லீக் போட்டியில் இலங்கை அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் போது இலங்கையிலுள்ள தொலைக்காட்சி சானல் தனது வர்ணணையில்,"இன்று ஜெயவர்தனா, சமரவீரா இருவரும் விரைவில் அவுட்டாகி திரும்புவார்கள். இலங்கை அணி தோற்கும். இது கட்டாயம் நடக்கும். இதற்காக ரூ.8 லட்சம் பெட் கட்டுகிறேன்'' என உள்ளூர் தொழிலதிபர் கூறியதாக தெரிவித்தது.
அவர் சொல்லியபடியே ஜெயவர்தனா 2, சமரவீரா 1 ரன் எடுத்து அவுட்டாகினர். போட்டியிலும் இலங்கை தோல்வியடைந்தது. இந்த செய்தி இலங்கையில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஜெயவர்தனா அந்த தொலைக்காட்சியின் மீது வழக்கு தொடர உள்ளதாக தெரிகிறது.
இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ஜெயவர்தனாவின் மானேஜர் கூறுகையில்,"இதற்கான முதல் கட்டவேலைகள் நடக்கின்றன" என்றார். சூதாட்ட செய்தி குறித்து இலங்கை கிரிக்கெட்டின் தலைமை அதிகாரி அஜித் ஜெயசேகரா கூறுகையில்,"சூதாட்டம் நடந்தது குறித்து இன்னும் சரியாகத் தெரியவில்லை. இது தவிர குறிப்பிட்ட இரண்டு வீரர்களிடம் இருந்தும் முறைப்படியாக எந்த புகாரும் வரவில்லை" என்றார்.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum