முயல் பொறியை எடுக்கச் சென்ற முன்னாள் போராளியை காணவில்லை என மனைவி முறைப்பாடு
Page 1 of 1
முயல் பொறியை எடுக்கச் சென்ற முன்னாள் போராளியை காணவில்லை என மனைவி முறைப்பாடு
முயலுக்கு வைத்த பொறியை எடுப்பதற்காக காட்டுக்குச் சென்ற முன்னாள் போராளியான குடும்பஸ்தர் ஒருவர் மல்லாவி பிரதேச கல்லுவான் பகுதியில் காணாமல் போயுள்ளதாக மனைவி பொலிஸில் முறைப்பாடு கொடுத்துள்ளார்.
இவ்வாறு காணாமல் போனவர் வடமராட்சியைச் சேர்ந்த புஸ்பராசா - விஜயபாபு (வயது25) என்பவர், போராளியாக இருந்த காலத்தில் மல்லாவி பிரதேசத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.
யுத்தத்தின்போது இராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட இவர் அண்மையில் தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். மேலும் இவர் தடுப்பு முகாமில் இருந்த காலத்தில் படையினரால் திருமணம் செய்து வைக்கப்பட்டு தற்போது மனைவி கர்ப்பவதியாகவும் உள்ளாராம்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை 8 மணிக்கு முயலுக்கு வைத்த பொறியை பார்ப்பதற்கென காட்டுப் பகுதியை நோக்கிச் சென்றவர் இதுவரை திரும்ப வீடு திரும்பவில்லை என இவரது மனைவி மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, தற்போது இராணுவத்தினரும் பொலிஸாரும் காட்டுப் பகுதியில் தேடுதல் நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு காணாமல் போனவர் வடமராட்சியைச் சேர்ந்த புஸ்பராசா - விஜயபாபு (வயது25) என்பவர், போராளியாக இருந்த காலத்தில் மல்லாவி பிரதேசத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.
யுத்தத்தின்போது இராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட இவர் அண்மையில் தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். மேலும் இவர் தடுப்பு முகாமில் இருந்த காலத்தில் படையினரால் திருமணம் செய்து வைக்கப்பட்டு தற்போது மனைவி கர்ப்பவதியாகவும் உள்ளாராம்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை 8 மணிக்கு முயலுக்கு வைத்த பொறியை பார்ப்பதற்கென காட்டுப் பகுதியை நோக்கிச் சென்றவர் இதுவரை திரும்ப வீடு திரும்பவில்லை என இவரது மனைவி மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, தற்போது இராணுவத்தினரும் பொலிஸாரும் காட்டுப் பகுதியில் தேடுதல் நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|