வெலிக்கடை சிறையின் பெண்கள் பிரிவில் பெருந்தொகையான மொபைல் போன்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது
Page 1 of 1
வெலிக்கடை சிறையின் பெண்கள் பிரிவில் பெருந்தொகையான மொபைல் போன்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது
வெலிக்கடை சிறையின் பெண்கள் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது பெருந்தொகையான மொபைல் போன்களும், பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த 19ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிரஸ்தாப சோதனையின் போது சிறைக்கூண்டுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 44 மொபைல் போன்களும், ரூபா ஆறாயிரம் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை பெண்கள் பிரிவின் சிறைக்கூண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது இந்தளவு பெருந்தொகையான மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டது இதுவே முதல் தடவை என்று கூறப்படுகின்றது.
மொபைல் போன்கள் மற்றும் பணம் என்பன மட்டுமன்றி, சிம் கார்ட்கள், மின்சார சாதனங்கள் உள்ளிட்ட பல பொருட்களும் பெண்கள் சிறைக்கூண்டுகளுக்குள்ளிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
தற்போது சிறைச்சாலை அத்தியட்சகர் பொறுப்பில் வைக்கப்பட்டிருக்கும் மேற்படி மொபைல் போன்கள் மற்றும் சிம்கார்ட்கள் என்பவற்றின் உரிமையாளர்களைக் கண்டறிந்து கொள்வதற்கு தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களின் உதவியை சிறைச்சாலைகள் திணைக்களம் நாடியுள்ளது.
கடந்த 19ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிரஸ்தாப சோதனையின் போது சிறைக்கூண்டுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 44 மொபைல் போன்களும், ரூபா ஆறாயிரம் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை பெண்கள் பிரிவின் சிறைக்கூண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது இந்தளவு பெருந்தொகையான மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டது இதுவே முதல் தடவை என்று கூறப்படுகின்றது.
மொபைல் போன்கள் மற்றும் பணம் என்பன மட்டுமன்றி, சிம் கார்ட்கள், மின்சார சாதனங்கள் உள்ளிட்ட பல பொருட்களும் பெண்கள் சிறைக்கூண்டுகளுக்குள்ளிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
தற்போது சிறைச்சாலை அத்தியட்சகர் பொறுப்பில் வைக்கப்பட்டிருக்கும் மேற்படி மொபைல் போன்கள் மற்றும் சிம்கார்ட்கள் என்பவற்றின் உரிமையாளர்களைக் கண்டறிந்து கொள்வதற்கு தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களின் உதவியை சிறைச்சாலைகள் திணைக்களம் நாடியுள்ளது.
theepan- தலைமை நடத்துனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|