அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கடத்தப்பட்ட லண்டன் இளைஞர் நேற்று விடுவிக்கப்பட்டார்

Go down

கடத்தப்பட்ட லண்டன் இளைஞர் நேற்று விடுவிக்கப்பட்டார்  Empty கடத்தப்பட்ட லண்டன் இளைஞர் நேற்று விடுவிக்கப்பட்டார்

Post by VeNgAi Wed Mar 23, 2011 2:51 pm

லண்டனில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்ததாக கூறப்படும் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு சுமார் 24 மணித்தியாலங்களின் பின்னர் நேற்று மாலை விடுவிக்கப்பட்டுள்ளார்.
29 வயதுடைய சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு கடத்தப்பட்டதாக சாவகச்சேரி காவல்துறை, மற்றும் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டிருந்தது.

இவர் தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பணியாளராக இருந்த நிலையில் மாணவர் வீசா மூலம் அண்மையிலேயே லண்டனுக்கு சென்றிருந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் நாடு திரும்பியிருந்த இவர் யாழ்ப்பாண நகரப்பகுதியில் வைத்து வாகனமொன்றில் வந்தவர்களால் கடத்தப்பட்டிருந்தார்.

சுமார் 24 மணித்தியாலங்களுக்கு பின்னர் இவர் கைகள், கண்கள் கட்டப்பட்டு யாழ்ப்பாண புறநகர் பகுதியில் விட்டுச் செல்லப்பட்டுள்ளார்.

பின்னர் இவர் மீட்கப்பட்டது தொடர்பாக குடும்பத்தவர்கள் சாவகச்சேரி காவல்நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics
» வன்னியில் இருந்து கடத்தப்பட்ட மாணவனை குறுஞ்செய்தி காப்பாற்றியது
» சிரேஷ்ட ஊடகவியலாளர் சபாரத்தினம் நேற்று கொழும்பில் காலமானார்
» நாங்கள் வீடுகள் கேட்கவில்லைஉணவு கேட்கவில்லை கடத்தப்பட்ட எங்கள் பி;ள்ளையைகணவன்மாரை மீட்டுத்தாருங்கள்
» யாழ். தீவகம் போக்குவரத்து நேற்று நண்பகல் வழமைக்கு திரும்பியது
» ஜனாதிபதிக்கெதிரான லண்டன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழ் மக்களா? குடியுரிமை பெற்ற விடுதலைப்புலிகளா?: கருணா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum