அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இலங்கை அரசாங்கத்தின் பிடிவாதக்கொள்கையில் மாற்றம்! ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவுள்ளது

Go down

இலங்கை அரசாங்கத்தின் பிடிவாதக்கொள்கையில் மாற்றம்! ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவுள்ளது  Empty இலங்கை அரசாங்கத்தின் பிடிவாதக்கொள்கையில் மாற்றம்! ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவுள்ளது

Post by priyanka Sun May 01, 2011 7:44 pm

ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூனின் நிபுணர் குழுவின் போர்க்குற்றச்சாட்டுக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவுள்ளது. இதுவரையில் இந்த அறிக்கைக்கு பதிலளிக்கப் போவதில்லை என்று இலங்கை அரசாங்கம் கூறிவந்தது.
இந்த அறிக்கை ஒருபக்க சார்பானது என்றும் அது சட்டவிரோதமானது என்றும் அரசாங்கம் கூறிவந்தது. எனினும் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக தமது பதிலை, அரசாங்கம், நியூயோர்க்கில் உள்ள தமது அலுவலகத்தின் ஊடாக அனுப்பிவைக்கவுள்ளது

அதேவேளை சர்வதேசத்தை திருப்திப்படுத்துவதற்காக இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி நல்லிணக்க ஆணைக்குழுவின் மூலம் சில முன்னுதாரண நடவடிக்கையை எடுக்க இலங்கை அரசாங்கம் முனைப்பு மேற்கொள்ளவுள்ளது

அத்துடன் எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை நிகழ்வின் போது தம்மை சுதாகரித்துக்கொள்ளவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன்கீழ் நாட்டில் தற்போது அமுலில் உள்ள அவசரக்கால சட்டத்தின் ஏற்பாடுகளில் தளர்வுகளை அரசாங்கம் கொண்டு வரவுள்ளது
priyanka
priyanka
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது
» ஆணைக்குழுவுடன் பேச்சு நடத்துவதற்கு அல்ல! சாட்சியமளிக்கவே ஐ.நா.நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் – அரசாங்கம் நிபந்தனையுடன் அனுமதி
» இலங்கை இந்தியாவுக்கு எதிராக செயற்படாது - இலங்கை அரசாங்கம்
» ஐநா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக தமிழர்களை அச்சுறுத்தி கையொப்பம் பெறும் சிறிலங்கா!
» நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இராஜதந்திரிகளின் மூலம் உலக நாடுகளுக்கு விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum