அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

"மக்கள் அன்பிற்கு நிறைய இடமுண்டு" - கமல்

Go down

"மக்கள் அன்பிற்கு நிறைய இடமுண்டு" - கமல்  Empty "மக்கள் அன்பிற்கு நிறைய இடமுண்டு" - கமல்

Post by Admin Wed Dec 22, 2010 4:40 am

'மன்மதன் அம்பு' படத்தில் வரும் பாடல் ஒன்றில் ஸ்ரீரங்கநாதரை கமல் கொச்சைப்படுத்திவிட்டதாகக் குற்றச்சாட்டு.
இந்தப் பாடலை கமலே பாடியிருக்கிறார் என்பதும் சம்பந்தப்பட்டவர்களின் எரிச்சல். இந்தப் பாடலை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்திருந்தார்கள் சில இந்துத்வா அமைப்பினர்.

சென்சார் அனுமதி கொடுத்த பின் யாருடைய வற்புறுத்தலுக்காகவும் அச்சுறுத்தலுக்காகவும் என்னால் அந்தப் பாடலை நீக்க முடியாது என்று கூறிவிட்டார் கமல். கடைசியில் கமலின் ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தை முற்றுகையிடுவோம் என்றது அந்த அமைப்பு.

அப்புறம் என்ன நடந்ததோ, அந்தப் பாடலை படத்திலிருந்து நீக்குவதாக அறிவித்திருக்கிறார் கமல். அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'மன்மதன் அம்பு' படத்தில் நான் எழுதிய பாடல் வரிகள் இந்துக்களின் மனதைப் புண்படுத்தக் கூடியதாக உள்ளது என்ற சேதி பரவலாகக் கிளம்பியதை நான் அறிவேன்.

இந்தப் பாடல் வரிகள் சென்சாரால் அனுமதிக்கப்பட்டு, விஜய் டிவியில் மூன்று முறை ஒளிபரப்பப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது எனது சொந்தப் படமாக இருந்திருந்தால், கண்டிப்பாக அந்த வரிகளை நிஜ ஆன்மீகவாதிகளைப் புண்படுத்தாது என்ற முழு நம்பிக்கையுடன் சென்சார் சான்றிதழோடு வெளியிட்டிருப்பேன்.

இது ரெட்ஜெயண்ட் படம். உதயநிதி ஸ்டாலினின் படம். எல்லோரும், எம்மதத்தவரும் படம் பார்க்க வரவேண்டும் என்ற நோக்கத்தில், பல கோடி பேர் ஏற்கெனவே பார்த்து ரசித்த பாடலாக இருந்தபோதிலும், இப்பாடல் காட்சியை நாங்களே முன்வந்து நீக்குகிறோம்.

என் குடும்பத்தில் சைவரும், வைணவரும், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் உள்ளனர். அவர்கள் என்னைப் போல் அல்ல.. தெய்வ விசுவாசிகள். நான் பகுத்தறிவுவாதி. அவ்வாறாகவே இருந்து வருகிறது, அதுவாகவே திகழும்.

'மன்மதன் அம்பு' வியாபாரம். அதுவும் மற்றவர்கள் செய்வது. நான் அதில் கலை ஊழியன் மட்டுமே. அரசியல்வாதிகளின் இடையூறு எனக்குப் புதிதல்ல.

மதமும் அரசியலும் கலந்த இந்த சிக்கலில் நல்ல ரசனை பலியாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும், அனைவரும் கண்டு ரசிக்கவும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மற்றபடி பகுத்தறிவுப் பாதையில் என் தேடல் தொடரும். அதில் "மக்கள் அன்பிற்கு நிறைய இடமுண்டு" என்று அவர் கூறியுள்ளார்.

"மக்கள் அன்பிற்கு நிறைய இடமுண்டு" - கமல்  Manmadhan_ambu001
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum