சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் - பல இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகளையும் உலகத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.
Page 1 of 1
சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் - பல இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகளையும் உலகத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.
வன்னியில் இடம்பெற்ற போரில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்களை சிறீலங்கா இராணுவம் கைகளை கட்டிய பின்னர் கொண்டு செல்லும் காட்சிகளையும், பல இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகளையும் உலகத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.
சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இந்த போர்க்குற்றங்கள் தொடர்பான புகைப்படங்களை நேற்று (19) சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் பிரித்தானியா வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போது தமிழ் மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது வெளியிடப்பட்டுள்ளது.
இதனை போல பெருமளவான புகைப்படங்கள் தம்மிடம் உள்ளதாகவும், அவற்றில் கைது செய்யப்பட்ட அப்பாவி மக்களும், அதனை மேற்கொண்ட படை அதிகாரிகளும் தொளிவாக தெரிவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உலகத் தமிழர் பேரவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளர்.
இதனிடையே, இந்த புகைப்படங்கள் சிறீலங்கா அரசின் மிருகத்தனமான மனித உரிமை மீறல்களை காட்டுவதாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்திற்குரிய எஸ் ஏஜ இமானுவேல் அடிகள் தெரிவித்துள்ளார்
சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இந்த போர்க்குற்றங்கள் தொடர்பான புகைப்படங்களை நேற்று (19) சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் பிரித்தானியா வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போது தமிழ் மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது வெளியிடப்பட்டுள்ளது.
இதனை போல பெருமளவான புகைப்படங்கள் தம்மிடம் உள்ளதாகவும், அவற்றில் கைது செய்யப்பட்ட அப்பாவி மக்களும், அதனை மேற்கொண்ட படை அதிகாரிகளும் தொளிவாக தெரிவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உலகத் தமிழர் பேரவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளர்.
இதனிடையே, இந்த புகைப்படங்கள் சிறீலங்கா அரசின் மிருகத்தனமான மனித உரிமை மீறல்களை காட்டுவதாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்திற்குரிய எஸ் ஏஜ இமானுவேல் அடிகள் தெரிவித்துள்ளார்
தமிழீழம் மலர தீக்குளித்த என் அண்ணனின் கனவு நிறைவேறவில்லையே! :முத்துக்குமாரின் தங்கை வேதனை
தமிழ் ஈழம் மலருவதற்காக தீக்குளித்த என் அண்ணன் முத்துக்குமாரின் கனவு நிறைவேறவில்லை, என்று அவரின் தங்கை தமிழரசி கண்ணீருடன் கூறினார்.
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி சென்னை பத்திரிக்கையாளர் மன்ற வளாகத்தில் நேற்று மாலையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முதல் கையெழுத்தை ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் சகோதரி தமிழரசி போட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
தனி ஈழம் என்ற அவருடைய கனவு இன்றும் நிறைவேறாமல் உள்ளது. அவருடைய கனவு நிறைவேற எல்லோரும் இன உணர்வுடன் போராட வேண்டும்.
முள்வேலியில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் விடுதலை பெற வேண்டும். இந்தியாவில் விடுதலைப்புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட வேண்டும் என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., கையெழுத்திட்டு பேசும்போது, விடுதலைப்புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட வேண்டும். இதற்காக எல்லோரும் இதில் கையெழுத்து போட்டு தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்றார்.
இந்த கையெழுத்துப் போராட்ட நிகழ்வில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர், தேசிய விடுதலை இயக்கம், தமிழர் தேசிய பொதுவுடைமை கட்சி, பெண்கள் அமைப்பினர், கவிஞர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்பட ஏராளமான அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி கையெழுத்திட்டனர்.
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி சென்னை பத்திரிக்கையாளர் மன்ற வளாகத்தில் நேற்று மாலையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முதல் கையெழுத்தை ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் சகோதரி தமிழரசி போட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
தனி ஈழம் என்ற அவருடைய கனவு இன்றும் நிறைவேறாமல் உள்ளது. அவருடைய கனவு நிறைவேற எல்லோரும் இன உணர்வுடன் போராட வேண்டும்.
முள்வேலியில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் விடுதலை பெற வேண்டும். இந்தியாவில் விடுதலைப்புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட வேண்டும் என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., கையெழுத்திட்டு பேசும்போது, விடுதலைப்புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட வேண்டும். இதற்காக எல்லோரும் இதில் கையெழுத்து போட்டு தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்றார்.
இந்த கையெழுத்துப் போராட்ட நிகழ்வில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர், தேசிய விடுதலை இயக்கம், தமிழர் தேசிய பொதுவுடைமை கட்சி, பெண்கள் அமைப்பினர், கவிஞர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்பட ஏராளமான அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி கையெழுத்திட்டனர்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|