வேட்பு மனுத்தாக்கல் செய்யச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முகவர் தீவகப் பகுதியில் கடத்தப்பட்டுள்ளார்
Page 1 of 1
வேட்பு மனுத்தாக்கல் செய்யச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முகவர் தீவகப் பகுதியில் கடத்தப்பட்டுள்ளார்
யாழ்ப்பாணம் நெடுந்தீவுப் பகுதியில் உள்ளூராட்சித் தோ்தல்களுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்யச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முகவர் கடத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி முறைப்பாடு செய்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் ஈ.பீ.டீ.பி. கட்சியின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் நெடுந்தீவுப் பகுதியிலேயே தமது முகவர் கடத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி தோ்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளது.
தமது முகவரின் கடத்தல் தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்வதால் பலன் கிட்டப் போவதில்லை என்பதன் காரணமாகவே தோ்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அது மாத்திரமன்றி கட்சி நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவுப் பிரதேசத்துக்குச் செல்லவிருந்த தமது கட்சியின் இன்னும் பல ஆதரவாளர்கள் ஈ.பீ.டீ.பி. கட்சியினரால் மிரட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டுகின்றார்.
ஆயினும் இக்குற்றச்சாட்டுகளை ஈ.பீ.டீ.பி.யின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மறுத்துள்ளார். தமது கட்சி தற்போது பிரஸ்தாப நெடுந்தீவுப் பகுதியை நிர்வாகம் செய்வதில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், உள்ளூராட்சித் தோ்தலை மையமாக வைத்து தம் கட்சி மீது அபாண்டம் சுமத்தும் நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஈ.பீ.டீ.பி. கட்சியின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் நெடுந்தீவுப் பகுதியிலேயே தமது முகவர் கடத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி தோ்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளது.
தமது முகவரின் கடத்தல் தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்வதால் பலன் கிட்டப் போவதில்லை என்பதன் காரணமாகவே தோ்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அது மாத்திரமன்றி கட்சி நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவுப் பிரதேசத்துக்குச் செல்லவிருந்த தமது கட்சியின் இன்னும் பல ஆதரவாளர்கள் ஈ.பீ.டீ.பி. கட்சியினரால் மிரட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டுகின்றார்.
ஆயினும் இக்குற்றச்சாட்டுகளை ஈ.பீ.டீ.பி.யின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மறுத்துள்ளார். தமது கட்சி தற்போது பிரஸ்தாப நெடுந்தீவுப் பகுதியை நிர்வாகம் செய்வதில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், உள்ளூராட்சித் தோ்தலை மையமாக வைத்து தம் கட்சி மீது அபாண்டம் சுமத்தும் நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
theepan- தலைமை நடத்துனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|