அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தமிழக மீனவர்கள் தனது கடற்பரப்புக்குள் ஊடுருவுவதை இலங்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது - இந்து

Go down

தமிழக மீனவர்கள் தனது கடற்பரப்புக்குள் ஊடுருவுவதை இலங்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது - இந்து Empty தமிழக மீனவர்கள் தனது கடற்பரப்புக்குள் ஊடுருவுவதை இலங்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது - இந்து

Post by theepan Sat Feb 19, 2011 3:36 pm

சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி தனது கடற்பரப்பிற்குள் ஊடுருவல் இடம்பெறுவதை இலங்கை அமைதியாகப் பார்த்துக்கொண்டு அவதானித்துக்கொண்டும் இருக்க முடியாது என்று சென்னையிலிருந்து வெளியாகும் இந்து நாளேடு நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறது.
தமிழக மீனவர்கள் இலங்கையில் கைதுசெய்யப்பட்டிருப்பது தொடர்பாக இந்து நேற்று வெளியிட்டிருக்கும் செய்தி ஆய்வில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
இலங்கைக் கரைக்குச் சமீபமாக மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர் கைதுசெய்யப்பட்டிருப்பது தொடர்பாக தீவிரமான கருத்தைக் கொண்டிருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்த சில மணித்தியாலங்களின் பின்னர் மற்றொரு தொகை மீனவர்கள் (24) அதே பகுதியில் வைத்து சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
புதுடில்லியில் புதன்கிழமை இடம்பெற்ற தொலைக்காட்சி ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது "ஆம்,மீனவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்த விடயத்தை இலங்கை அரசாங்கத்தின் கவனத்துக்கு நாம் கொண்டு சென்றிருக்கிறோம். இந்த விடயம் குறித்து தீவிரமான கருத்தைக் கொண்டுள்ளோம்' என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கைக் கடற்பரப்பில் 112 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பது தொடர்பான கேள்விக்கே அவர் இந்தப் பதிலை அளித்திருந்தார். அதேசமயம், கொழும்பிடம் இருந்து விடுக்கப்பட்ட செய்தி தெளிவானதாக அமைந்திருந்தது. தனது கடல் எல்லை மற்றும் இறைமையைப் பாதுகாப்பதற்கான உரிமையானது பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டது என்பதை இலங்கை நிலைநிறுத்திக் கொள்ளும் என்பதே அந்த செய்தியாகும்.
2008 அக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு உடன்படிக்கையை இப்போதும் இந்தியா பற்றிப் பிடித்திருக்கிறது. தனது மீனவர்கள் தடுத்து வைக்கப்படும்போது ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வுகாணும்போது உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்ட பொறிமுறை மூலமே முயற்சிப்பது என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்து வருகிறது.
அத்துடன், 2008 அக்டோபர் உடன்படிக்கையை உறுதியாகப் பின்பற்றும் விதத்திலேயே அண்மையில் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமா ராவ் மேற்கொண்ட விஜயத்தின்போது வெளியிடப்பட்ட கூட்டுப் பிரகடனத்திலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை அந்த உடன்படிக்கையானது மற்றொரு சகாப்தத்தின் ஒரு பகுதியாகும். கணிசமானளவு அதனை மீளாய்வு செய்ய இலங்கை விரும்புகிறது.
2008 இல் அந்த உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு அரசியல் ரீதியான உணர்வு காணப்பட்டதால் அதனை மேற்கொண்டிருந்தது. இப்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் உணர்வானது 2009 மே இற்குப் பின்னரான களநிலை யதார்த்தங்களுக்கு அமைவானதாக மீளாய்வு செய்ய வேண்டிய தேவையை இப்போது ஏற்படுத்தியிருக்கிறது.
விடுதலைப்புலிகளை இராணுவம் தோற்கடித்த பின்னரான தற்போதைய களநிலைவரத்தை அடிப்படையாகக் கொண்டு மீளாய்வு செய்யப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இலங்கை உள்ளது. இந்த விடயத்தில் இந்தியா வேறுபட்ட அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தது, இப்போதும் கொண்டிருக்கின்றது. அத்துடன், இலங்கையின் புதிய தேவை தொடர்பாக அது பதிலளித்திருக்கவில்லை.
இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் பிரதானமாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் நீண்டகாலமாக மீன்பிடித்து வருகின்றனர். அவர்களில் சிலர் ஆடைகள், நுகர்வுப்பொருட்கள் என்பவற்றை கடத்திச் செல்கின்றனர். அத்துடன், இந்தியாவுக்கு மதுபானத்தைக் கடத்தி வருகின்றனர். பாரிய தொகையில் இந்த மீனவர்கள் குழுவாக வருவதால் உள்ளூர் மீனவர்கள் அவர்களை அச்சுறுத்துவதில்லை. யாவற்றுக்கும் மேலாக இந்தியப் படகுகள் இலங்கையின் படகுகளைவிட வேகமாகச் செல்பவையாகும்.
2011 ஜனவரியில் இந்திய மீனவரொருவர் கொல்லப்பட்டிருந்தார். இரு வருடங்களில் இடம்பெற்ற முதலாவது சம்பவமாக அமைந்ததுடன், ஒரு திருப்புமுனையாகவும் அது காணப்படுகிறது.
இலங்கை கோரியிருந்ததன் பிரகாரம் அத்தாட்சியை இந்திய அரசாங்கத்தால் வழங்கக்கூடியதாக இருந்தது. படகு சம்பந்தப்பட்ட சோதனைகளின் பெறுபேறுகள் மற்றும் மீனவரின் பிரேத பரிசோதனை அறிக்கை என்பனவற்றை நிரூபமா ராவ் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார். இலங்கைக் கடற்படையின் தரத்தைச் சார்ந்ததாக சன்னங்கள் இருந்தமை என்பதே முடிவுக்கு வந்த தீர்மானமாகும்.
கூட்டறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் இந்த விடயமானது மற்றொரு திருப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. கரைப்பகுதியில் வைத்து இந்திய மீனவர்களை இலங்கைத் தமிழ் மீனவர்கள் கைதுசெய்கின்றனர் என்பதே அந்தத் திருப்பமாகும்.
இலங்கை மீனவர்களை தொலைவில் இந்திய மீனவர்கள் பார்க்கும்போதும் கூட பாரியதும் துரிதமாகச் செல்லக்கூடியதுமான படகுகளில் வரும் இந்திய மீனவர்கள் அந்த இடத்தைவிட்டுச் செல்வதற்கு வழமையாக முயற்சிப்பதில்லை. ஆனால், இந்தச் சம்பவத்தில் அவர்கள் தப்பிச்செல்லவில்லை. பெப்ரவரி 16 மாலை இச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. இலங்கை மீனவர்கள் இந்திய மீனவர்களைக் கைதுசெய்துள்ளனர்.
இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் பிரசன்னத்துக்கு எதிராக உள்ளூர் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள் என்ற மாதிரியான விடயங்களை இலங்கை அரசாங்கமும் அதிகாரிகளும் கொண்டிருக்கின்றனர். இந்த வாதத்தை இந்திய தரப்பு நிராகரிக்கும் போக்கைக் கொண்டுள்ளது.
கடந்த மூன்று தசாப்தங்களில் வடபகுதி மீனவர்கள் மீன்பிடிப்பதில் ஈடுபட்டிருக்கவில்லை. இந்தியர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபடக்கூடியளவுக்கு வைத்திருக்கும் உபகரணங்களையும் அவர்கள் வைத்திருக்கவில்லை.
இலங்கை மீனவர்கள் எப்போதுமே தமது கடல் எல்லைக்குள் தொழில் செய்வதாகவும் அதேசமயம்,தமது கடற்பரப்புக்குள் வெளியார் மீன்பிடிப்பதை ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்பதுமே இலங்கையின் மற்றொரு வாதமாகும்.
அரேபியக் கடலின் தமிழக,கேரள மீனவர்கள் மோதிக்கொள்ளும் சம்பவங்களும் ஆந்திரக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் ஊடுருவும் போது மோதல் ஏற்படும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.
ஒரேநாட்டைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு பிரதிபலிப்புகளை வெளியிடும்போது சர்வதேச கடல்எல்லையைத் தாண்டி கிரமமான முறையில் ஊடுருவல் இடம்பெறுவதை இலங்கையால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்தியர்களை மீன்பிடிக்க அனுமதிப்பது நிச்சயமாக முடியாததொன்றாகும். அதுவும் இலங்கையின் கரையோரத்துக்குச் சமீபமாக மீன்பிடிக்க அனுமதிப்பது இயலாத விடயமாகும்.
ஆயினும் அதிகளவு மீன்வளங்கள் இருப்பதால் இந்த விடயம் இடம்பெறுகிறது. அத்துடன், இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு ஏதாவது விட்டுக்கொடுப்பை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷவின் உள்நாட்டு அரசியல் நெருக்குதல்களும் இடமளிக்கமாட்டாது. ஏனெனில் உள்ளூராட்சித் தேர்தல்கள் அண்மித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு இடமளிப்பதற்கு உள்ளூர் அரசியல் அழுத்தங்கள் இடமளிக்காத நிலைமை காணப்படுகிறது.
இரு மாதங்களில் தமிழ்நாட்டிலும் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. சகல அரசியல் கட்சிகளின் தலைவர்களுமே இலங்கை விவகாரத்தை உயர்த்திப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர். இலங்கைத் தமிழ் மீனவர்களே தமிழ்நாட்டின் மீனவர்களைக் கைதுசெய்துள்ளனர் என்ற விடயம் அநேகமான அரசியல்வாதிகளிடமிருந்து அவர்களின் வசதிக்கு ஏற்புடையதாக காணாமல்போய்விட்டது. சிங்கள அரசின் அடாவடித்தனங்களே என அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
2009 லோக்சபாத் தேர்தலானது விடுதலைப்புலிகள் சிறைப்பிடிக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்டபோதே இடம்பெற்றது. தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் இலங்கைப் பிரச்சினை உண்மையில் முக்கியமான இடத்தை அச்சமயம் பிடித்திருக்கவில்லை என்பதை தேர்தல் வெளிப்படுத்தியது.
ஆனால், இந்தத் தடவை சிறைப்பிடிக்கப்பட்ட மற்றும் கொல்லப்பட்டவர்கள் மற்றொரு நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல. தமிழ்நாட்டின் ஒரே மொழித் தொடர்பைக் கொண்டவர்களாகும். அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களாகும்.
இதனால் தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த கரையோரத் தேர்தல் தொகுதிகளில் வெற்றி, தோல்வியில் வித்தியாசத்தை இந்த விடயம் உருவாக்கக்கூடும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum