அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யாழ்ப்பாணத்தில் மீண்டும் யுத்தகால நிலைமைகள்: இராணுவக் கெடுபிடிகள் அதிகரிப்பு

Go down

யாழ்ப்பாணத்தில் மீண்டும் யுத்தகால நிலைமைகள்: இராணுவக் கெடுபிடிகள் அதிகரிப்பு  Empty யாழ்ப்பாணத்தில் மீண்டும் யுத்தகால நிலைமைகள்: இராணுவக் கெடுபிடிகள் அதிகரிப்பு

Post by kaavalan Fri Feb 25, 2011 1:36 am

யாழ். குடாநாடு முழுவதும் இராணுவத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைக் கெடுபிடிகள், குடும்பப்பதிவு விபரம் திரட்டல், வீதிரோந்து நடவடிக்கைகள் இரவு நேரத்தில் வீடுகளுக்கு சென்று சோதனைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்தோடு வலி. வடக்குப் பகுதிகளில் 100 மீற்றருக்கு இடையிடையே இராணுவச் சோதனை சாவடிகளை அமைத்து உடற்பரிசோதனைகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வடலியடைப்பு பகுதிகளில் காலையில் வாகனங்களில் வேலைக்கு செல்பவர்கள் வீதிகளில் இறக்கி பல மணித்தியாலயங்கள் உடற் சோதனைகளுக்கு பின்பே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

வீதிகள் எங்கும் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளதோடு அடிக்கடி சுற்றிவளைப்புக்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலைமையினால் யாழ்.மக்கள் மத்தியில் அச்ச உணர்வு தோன்றுகின்றது. வீதிகளில் மக்கள் இறங்குவதற்கு பயப்படுகின்றார்கள். ஏன் இவ்விதமான பாதுகாப்பு கெடுபிடிகள் என்று தெரியாத நிலை யாழ்ப்பாணத்தில் காணப்படுகிறது.

யுத்தகால நிலைமைகள் போன்றே இன்று யாழ்ப்பாணம் காணப்படுவதை யாராலும் மறைக்கவும் முடியாது. மறுக்கவும் முடியாது என்பதை நேரில் பார்ப்பவர்களுக்கு விளங்கும்.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களின் நடத்தை குறித்து அதிருப்தி
» மட்டக்களப்பில் பகல் கொள்ளைகள் அதிகரிப்பு
» யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை வெடிபொருட்களுடன் லொறியொன்று கைப்பற்றப்பட்டுள்ளது
» யாழ்ப்பாணத்தில் கட்டிளம் யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
» யாழ்ப்பாணத்தில் இருந்தும் செஞ்சிலுவைச் சங்கம் வெளியேறியுள்ளது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum