அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மிதுனம் 01-01-2011 TO 31-12-2011

Go down

மிதுனம் 01-01-2011 TO 31-12-2011  Empty மிதுனம் 01-01-2011 TO 31-12-2011

Post by Admin Sat Jan 01, 2011 9:03 am

எப்பொழுதும் சுறுசுறுப்பும் ஊக்கமும் உடைய உங்களுக்கு இவ்வருடம் எதிர்பார்த்த நற்பலன்கள் நடந்தே தீரும் .இதுவரை ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கி நற்பலன்கள் கூடும்.உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும் .மேலும் புதிய விஷயங்களை கற்பதிலும் புதிய முயற்சிகளிலும் துணிந்து ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள் .வெற்றியை மட்டுமே குறிகோளாகக் கொண்டு செயல்பட்டு இறுதியில் வெற்றியை மட்டுமே அடைவிர்கள் .

பேச்சில் சாமர்த்தியசாலிகளான நீங்கள் அதிகமாகப் பேசுவதைத் தவிர்க்கவும் வில்லங்கமான வார்த்தையால் பிரச்சினைகள் ஏற்பட்டு அவமானப்பட நேரிடும் .எனவே அதிகமாக பேசுவதை தவர்க்கவும் இல்லையேல் நன்கு யோசித்து பேசி செயல்படவும் .உடன் பணிபுரிபவர்களிடமும் மேலதிகாரிகளிடமும் கவனமாக பேசி பழகுதல் வேண்டும் .

புதிய தொழில் தொடங்க ஒரு சிலர்க்கு சந்தர்ப்பம் அமையும் .உடன் பிறந்தவர்களால் நற்பலன்கள் ஏற்படும். உடன் பிறப்புகளுக்கு தள்ளிபோகும் சுப காரியம் ஒரு சிலருக்கு நடக்க வாய்ப்பு அமையும் .பகுதிநேரமாகவோ அல்லது தபால் மூலமாகவோ கல்வி கற்க வாய்ப்பு அமையும் .அடிக்கடி நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வாய்ப்பு அமையும் .அதன் முலம் வெற்றி கிடைக்கும் .உறவினர்களால் எதிர்பார்த்த நற்பலன் அமைய வாய்ப்பு கிட்டும்.

இடம்,மனை,வீடு,வீட்டு உபயோக பொருட்கள் வாங்க சந்தர்ப்பம் அமையும் .கடன் வாங்கி வீடு ,வண்டி வாகனம் வாங்க யோகம் ஏற்படும். கல்வியில் நல்ல முன்னேற்றம் .தேர்வில் நல்ல மதிப்பெண் அமைந்து எதிர்பார்க்கும் கல்லூரி கிடைக்க சந்தர்ப்பம் அமையும் .தாயாரால் நன்மை ஏற்படும் .

குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு மக்கட்செல்வம் கிடைக்கும் . குழந்தைகளுக்கு இதுவரை தள்ளி போன சுப காரியம் நடந்தேறும் .ஒரு சிலர்க்கு குழந்தைகளால் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும் . குழந்தைகளால் எதிர்பார்த்த லாபம் கிட்டும் .குழந்தைகள் வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும் . கலைத்துறையில் அதிக ஈடுபாடு அதிகரிக்கும் .கலைகளால் பெயர் , புகழ் , நல்ல வருமானம் ஏற்படும். பங்கு சந்தையில் ஆரம்பத்தில் லாபம் ஏற்படினும் நடுவில் சிறிது தொய்வு ஏற்பட்டு வருட இறுதியில் நல்ல லாபம் ஏற்படும் காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் ,சந்தோஷகரமாகவும் இருக்கும். ஒரு சிலருக்கு காதலில் நிறைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும் .அடிக்கடி உல்லாச பயணம் செல்ல வாய்ப்பு அமையும்.

இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும் . பார்க்கும் வேலையில் உத்தியோக உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும் .பார்க்கும் வேலையில் ஒரு சிலருக்கு மாற்றம் ஏற்படும் . வேலை பிடிக்காமல் அல்லது கம்பெனி பிடிக்காமல் ஒரு சிலர் வேறு கம்பெனிக்கு மாறக்கூடும் .போட்டிதேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றியை பெற கடுமையாக உழைக்க வேண்டிவரும் .நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும் . கடன் வாங்குவதில் தடை ஏற்பட்டு ஒரு சிலருக்கு கடன் கிடைக்கும் உடல் ஆரோக்யத்தில் மிக அதிக கவனம் தேவை . குறிப்பாக பெண்கள் அதிக அளவில் உடல்நலத்தில் கவனம் செலுத்துதல் வேண்டும். உடலில் அடிவயிறு , தலை , முழங்கால் பகுதிகளில் நோய் ஏற்பட்டு விலக சந்தர்ப்பம் உண்டு .

இதுவரை தள்ளிப்போன திருமணம் நடக்க வாய்ப்பு இருந்தாலும் ஒரு சிலருக்கு மன வாழ்க்கையில் எதிர்பார்த்த இனிமை இராது . வழக்குகள் இழுப்பறியுடன் காணப்படும் . வழக்குகளில் வெற்றி அடைய கடும் போராட்டமே நடத்த வேண்டி வரும் . உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும் . தேவையில்லாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுதல் கூடாது . தந்தையாரால் ஆதாயமும் ஒரு சிலருக்கு பிரச்சனைகளும் ஏற்படும். அரசாங்கத்தால் ஒரு சிலருக்கு துன்பமும் துயரமும் அமையும்.

உயர் கல்வி பயில சந்தர்ப்பம் அமையும் . வெளிநாடு வெளிமாநிலங்கள் செல்ல வாய்ப்பு அமையும். ஆலய மற்றும் தெய்வ தரிசனங்கள் கிட்டும். அதனால் நன்மை ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் புரிபவர்கள் நல்ல லாபம் பார்ப்பார் . சுயதொழில் , சிறுதொழில் மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில் புரிபவர்கள் ஏற்றம் பெறுவர் .

தகவல் தொடர்பு , போக்குவரத்து , சாப்ட்வேர் மற்றும் ஆடிட்டர் போன்ற துறைகளில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவர் . மருத்துவம் , பொறியியல் , ரசாயனம் இத்துறையில் இருப்பவர்கள் கவனமுடன் நடந்து கொள்ளல் வேண்டும் .

ஜவுளி , கண்ணாடி , ஓவியம் , இசை , நடனம் , நாட்டியம் , சின்னத்திரை , பெரியதிரையில் இருப்பவர்கள் புகழ் பெறுவர் . பால் மற்றும் தண்ணீர் சார்ந்த பொருட்களை விற்பவர்கள் , பழங்கள் , காய்கறிகள் , பூக்கள் , மீன்பிடித்தொழில் புரிபவர்கள் , ரியல் எஸ்டேட் , ப்ரோக்கர்கள் , வணிகர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர் . வணிகர்கள் , விவசாயிகளுக்கு விவசாயத்தில் எதிர்பார்த்த நற்பலன்கள் ஏற்படும் .

எலெக்ட்ரிக்கல் , எலக்ட்ரானிக்ஸ் , அழகுசார்ந்த பொருட்களை உற்பத்தி செய்வோர் அதில் ஈடுபடுவோர் நல்ல லாபம் ஈட்டுவர் . ஓட்டல் , நகை மற்றும் ஆபரண பொருட்கள் உற்பத்தி செய்வோர் மற்றும் அதை விற்பவர்கள் நல்ல லாபம் ஈட்டுவர் .

அவரவரது குலதெய்வ வழிபாடும் ஸ்ரீ மகாலெஷ்மியையும் வழிபட நற்பலன்கள் மிகும் . வேளாங்கண்ணி சென்று மாதாவை வணங்கி வர எதிர்பார்த்த நற்பலன்கள் பூர்த்தியாகும் .
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum