உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸாருக்கு பழுதடைந்த உணவு
Page 1 of 1
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸாருக்கு பழுதடைந்த உணவு
இலங்கையில் நடைபெற்று வருகின்ற உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது பாதுகாப்பு கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸாருக்கு பழுதடைந்த உணவு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நேற்று முன்தினம் அவர்கள் பட்டினியுடன் கடமையாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த உணவு தொகை, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின், உலக கிண்ண போட்டி ஏற்பாட்டுக் குழுவினால் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த உணவுகள் இலங்கையில் பிரபல பெயர் பெற்ற வெதுப்பக உற்பத்தி நிறுவனத்தினாலேயே வழங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னர் பொலிஸாருக்கு உணவு வழங்குவதற்கு தனியான இடம் ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் பின்னர் அது மாற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு மாத்திரம் சினமன்ட் கிரான்ட் எனும் பிரபல விருந்தகத்திலிருந்து பெற்று உணவு வழங்கப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
theepan- தலைமை நடத்துனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|