முல்லைத்தீவில் மீனவர் சடலமாக மீட்பு
Page 1 of 1
முல்லைத்தீவில் மீனவர் சடலமாக மீட்பு
முல்லைத்தீவில் கடல் தொழிலுக்குச் சென்ற மீனவரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மூலம் தகவல்கள் கிடைத்துள்ளன.
கேதீஸ் சந்திரமோகன் எனும் முப்பத்தி நான்கு வயதுடைய மீனவரே அவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த நான்கு நாட்களுக்கு முன் கடலுக்குச் சென்றிருந்த அவர் அதன் கரைக்குத் திரும்பவில்லை.
மூன்று நாட்களுக்கும் மேல் காணாமற்போயிருந்த நிலையில் நேற்று அவரது சடலம் முல்லைத்தீவின் அலம்பில் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலம் தற்போது அலம்பில் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மரணத்திற்கான காரணம் குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் வெளியாகாத நிலையில், பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கேதீஸ் சந்திரமோகன் எனும் முப்பத்தி நான்கு வயதுடைய மீனவரே அவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த நான்கு நாட்களுக்கு முன் கடலுக்குச் சென்றிருந்த அவர் அதன் கரைக்குத் திரும்பவில்லை.
மூன்று நாட்களுக்கும் மேல் காணாமற்போயிருந்த நிலையில் நேற்று அவரது சடலம் முல்லைத்தீவின் அலம்பில் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலம் தற்போது அலம்பில் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மரணத்திற்கான காரணம் குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் வெளியாகாத நிலையில், பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
kaavalan- முக்கிய பிரமுகர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|