விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இலங்கையரொருவர் மும்பையில் கைது
Page 1 of 1
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இலங்கையரொருவர் மும்பையில் கைது
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நபரொருவர் இந்தியாவின் மும்பையில் மறைந்து வாழ்ந்த நிலையில் இந்தியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கார்த்திக் எனும் இயற்பெயர் கொண்ட அவர் ராஜன் சிலிதுரியா எனும் புனைப் பெயரில் இந்தியப் பிரஜை போன்று கடந்த நான்கு வருடகாலமாக மும்பையில் அடிக்கடி இடம் மாறி வசித்து வந்துள்ளார்.
கடைசியாக அவர் மும்பையின் நவி மும்பை பிரதேசத்தில் வசித்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் போதை மருந்து கடத்தல் சம்பவம் தொடர்பாகவும் அவர் மீது பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொலிசாரால் தேடப்பட்டு வந்துள்ளதாகவும் மும்பைப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக்கிற்கு இந்திய பயங்கரவாத இயக்கங்களுடனும் தொடர்புகள் உண்டா என்பது குறித்து தற்போது மகாராஷ்டிரா பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கார்த்திக் எனும் இயற்பெயர் கொண்ட அவர் ராஜன் சிலிதுரியா எனும் புனைப் பெயரில் இந்தியப் பிரஜை போன்று கடந்த நான்கு வருடகாலமாக மும்பையில் அடிக்கடி இடம் மாறி வசித்து வந்துள்ளார்.
கடைசியாக அவர் மும்பையின் நவி மும்பை பிரதேசத்தில் வசித்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் போதை மருந்து கடத்தல் சம்பவம் தொடர்பாகவும் அவர் மீது பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொலிசாரால் தேடப்பட்டு வந்துள்ளதாகவும் மும்பைப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக்கிற்கு இந்திய பயங்கரவாத இயக்கங்களுடனும் தொடர்புகள் உண்டா என்பது குறித்து தற்போது மகாராஷ்டிரா பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|