அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ் ஈழம் தான் நிரந்தர தீர்வாக அமையும் - பா.ம.க. ராமதாஸ்

Go down

இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ் ஈழம் தான் நிரந்தர தீர்வாக அமையும் - பா.ம.க. ராமதாஸ்  Empty இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ் ஈழம் தான் நிரந்தர தீர்வாக அமையும் - பா.ம.க. ராமதாஸ்

Post by Admin Tue Mar 22, 2011 1:58 pm

இலங்கைத் தமிழர்களுக்கு தமிழீழம் தான் நிரந்தரத் தீர்வாக அமையும் என இந்திய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் தமிழீழம் அமைய இந்திய அரசு துணை நிற்க வேண்டும். இலங்கை அரசு ஒருபோதும் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்க மாட்டார்கள்.

கடைசி கட்ட போரின்போது இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை, போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை அமைப்பு, பன்னாட்டு நீதிமன்றம் மூலம் விசாரிக்கப்படவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் இந்திய அரசு ஆவன செய்ய வேண்டும்.

இலங்கை கடற்படையினரிடம் இருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவும், அவர்களின் மீன்பிடி உரிமையை உறுதி செய்யவும், கச்சதீவை மீட்கவும் பா.ம.க. பாடுபடும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» தீபச்செல்வனின் ‘ஈழம் மக்களின் கனவு’ என்னும் புதிய நூல்
» பார்வதியம்மாவின் மறைவுக்கு வைகோ, ராமதாஸ் ஆகியோர் இரங்கல்! நாளை சென்னையில் அஞ்சலி கூட்டம்
» புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அரசாங்கம் அநீதியிழைக்க முயல்கின்றது: பிரபா கணேசன்
» இலங்கை செல்லும் புலம்பெயர் தமிழர்களுக்கு ஆபத்து இல்லை - கனடா
» இலங்கைத் துணைத் தூதரகத்தை மூடுமாறு போராட்டம்: பழ.நெடுமாறன் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum