அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

களனிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

Go down

களனிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை  Empty களனிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

Post by VeNgAi Wed Mar 23, 2011 2:52 pm

களனிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
முறைப்பாடு தொடர்பான அறிக்கை ஒன்றை வழங்குமாறு நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவினை குறித்த பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி உதாசீனம் செய்துள்ளதாக சட்டத்தரணிகள் நீதிமன்றில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

களனி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி புஷ்பகுமார என்பவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

குறித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதேசத்தின் சிரேஸ்ட அரசியல்வாதியொருவரின் ஆதரவாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் தலையீடு காரணமாக குறித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நீதிமன்ற உத்தரவினை உதாசீனம் செய்துள்ளதாக சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நீதிமன்றின் உத்தரவுகளுக்கு பொலிஸார் கட்டுப்பட்டுச் செயற்பட வேண்டுமென நீதவான் வலியுறுத்தியுள்ளார்.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics
» இலஞ்சம் பெறும் பொலிஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: மட்டு.பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்
» இலங்கை போர்க்குற்றங்களை விசாரிக்க விசேட நீதிமன்றம்!- ஐ.நா. உள்ளக அறிக்கை
» ஏப்ரல் 13, 2036 இல் பூமிக்கு அழிவா?: விஞ்ஞானிகள் எச்சரிக்கை (பட இணைப்பு)
» லேக்ஹவுஸ் ஊடக நிறுவனம் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினருக்கு ஐநூறு மில்லியன் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
» இலங்கைக்கு மின்சாரம் விநியோகித்தால் போராட்டம் வெடிக்கும்! பாரதீய ஜனதா கட்சி எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum