அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

த.தே.கூட்டமைப்பு கைப்பற்றிய சபைகளில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர்களே தவிசாளர்கள்

Go down

த.தே.கூட்டமைப்பு கைப்பற்றிய சபைகளில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர்களே தவிசாளர்கள் Empty த.தே.கூட்டமைப்பு கைப்பற்றிய சபைகளில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர்களே தவிசாளர்கள்

Post by priyanka Thu Mar 24, 2011 10:10 am

உள்ளூராட்சிச் சபைகளில் தமி தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற்ற 12 உள்ளூராட்சி சபைகளுக்கும் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்றவர்களே தவிசாளர்களாகவும், தலைவர்களாகவும் நியமிக்கப்படவுள்ளனர்.
நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த 17ம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் 15 சபைகளில் போட்டியிட்டு 12 சபைகளைக் கைப்பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் உள்ளூராட்சி சபைகள் அனைத்தும் இயங்கவுள்ளன.

வெற்றிபெற்ற சபைகளுக்கு யாரைத் தவிசாளர்களாகவும், தலைவர்களாகவும் நியமிப்பது தொடர்பாக நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், மாவை சேனாதிராசா ஆகியோரும், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
priyanka
priyanka
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» சுவிசில் இவ்வருடம் அதிக பனிப்பொழிவு
» அரசாங்கம் - தமிழ்க் கூட்டமைப்பு இணக்கம்! இரு வாரங்களுக்கு ஒரு தடவை சந்திப்பு
» அரசியல் கள நிலவரங்கள் குறித்து சம்பந்தனுடன் சென்னையில் த.கூட்டமைப்பு மந்திராலோசனை
» உடலில் அதிக உரோமங்களுடன் சாதனை படைத்துள்ள சிறுமி
» த.தே.கூட்டமைப்பு கேட்டதையெல்லாம் வழங்க முடியாது - இலங்கை அரசாங்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum