அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கண்கள், கைகளைக் கட்டிவிட்டு சிகரெட்டினால் சுட்டுத் தாக்கினார்: கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட லண்டன் இளைஞன் தகவல்

Go down

கண்கள், கைகளைக் கட்டிவிட்டு சிகரெட்டினால் சுட்டுத் தாக்கினார்: கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட லண்டன் இளைஞன் தகவல்  Empty கண்கள், கைகளைக் கட்டிவிட்டு சிகரெட்டினால் சுட்டுத் தாக்கினார்: கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட லண்டன் இளைஞன் தகவல்

Post by Admin Fri Mar 25, 2011 4:27 pm

என்னைக் கடத்தியவர்கள் எனது கண்களையும் கைகளையும் கட்டிவிட்டு கதறக்கதற முட்கம்பிகளாலும் மரச்சலாகைகளாலும் தாக்கினர். பல தடவைகள் மயங்கி வீழ்ந்த போதும் பல இடங்களில் காயம் ஏற்படுமளவுக்கு சிகரெட்டினால் சுட்டனர்.
ஒருவர் சிங்கள மொழியில் ஏதேதோ கேள்விகள் சொல்லச் சொல்ல இன்னொருவர் அதனை மொழி பெயர்த்து தமிழில் கேட்டவாறு இருவரும் தாக்கினர்.

இவ்வாறு தெரிவித்தார் லண்டனில் இருந்து வந்திருந்த வேளை இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு 27 மணித்தியாலங்களின் பின் வயல்வெளியில் வீசப்பட்ட மீசாலை மேற்கைச் சேர்ந்த கதிரவேலு அஜந்தன் (வயது29) என்ற இளைஞன்.

அவர் கடத்தப்பட்டுத் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இது பற்றி மேலும் தெரியவருவதாவது

குறித்த இளைஞன் கடந்த டிசெம்பர் மாதம் மாணவர் விசாவில் லண்டன் சென்றிருந்தார். இந்த நிலையில் விடுமுறையில் தனது சொந்த இடத்துக்கு வந்த அவர் தனது நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக கடந்த திங்கட்கிழமை யாழ். நகருக்கு வந்தபோது இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டார்.

தபாற்கந்தோர் வீதியூடாக ஸ்ரான்லி வீதிக்குச் செல்லும் போது இவருக்கு பின்புறமாக வந்த வெள்ளை வானில் இருந்த இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டார்.

வெள்ளை வானுக்குக் கீழே வீழ்த்தப்பட்டு அவர் அணிந்திருந்த ரீசேட்டை கழற்றி அவரது கண்களை கட்டினர். கயிற்றினால் கைகளை பின்புறமாக வைத்துக் கட்டினர்.

லண்டனுக்கு சென்றதற்கான காரணம், அதற்கான பணம் எவ்வாறு கிடைத்தது, திரும்பி வந்ததற்கான காரணம் என்பவற்றை விசாரித்ததோடு ஒன்லைன் மூலமாகப் பணம் பெற்றுக் கொள்ளும் வங்கி அட்டைகள், பேர்ஸ் என்பவற்றையும் எடுத்து வைத்து வங்கியில் எவ்வளவு பணம் உள்ளது என்று கேட்டனர்.

இந்த விசாரணைகள், தாக்குதல்கள் வீடொன்றில் வைத்தே இடம்பெற்றது.

பின்னர் மறுநாள் செவ்வாய்க்கிழமை பி.ப.3.30 மணியளவில் அராலி வீதியில் கல்லுண்டாய் வீதிப் பகுதியிலுள்ள வயற்காணி ஒன்றினுள் அவரைத் தூக்கி வீசிவிட்டு வெள்ளை வான் கும்பல் தப்பிச் சென்றது.

அங்கிருந்து பஸ் மூலம் யாழ்.நகர் வந்த அவர் தற்போது யாழ். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» அமைச்சர் புஷ்பகுமார தாக்கினார்: ஜனாதிபதி ஜயலத்தைத் தடவிப் பார்த்தார்
» விடுவிக்கப்பட்ட போராளிகள் மீது யாழ்ப்பாணத்தில் படையினர் கெடுபிடி
» விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர் மட்டக்களப்பில் கைது
» கடத்தப்பட்ட லண்டன் இளைஞர் நேற்று விடுவிக்கப்பட்டார்
» ஜனாதிபதிக்கெதிரான லண்டன் ஆர்ப்பாட்டத்தில் சிங்களவர்களும் புலிக்கொடி ஏந்தியிருந்தார்கள்: ஜீ.எல்.பீரிஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum