தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கருத்துக்களால் அதிருப்தியுற்று கலந்துரையாடல் குழுவிலிருந்து அமைச்சர் ரத்தினசிறி விலகல்
Page 1 of 1
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கருத்துக்களால் அதிருப்தியுற்று கலந்துரையாடல் குழுவிலிருந்து அமைச்சர் ரத்தினசிறி விலகல்
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வெளியிட்ட கருத்துக்கள் காரணமாக அக்கட்சியுடனான கலந்துரையாடல் குழுவிலிருந்து அமைச்சர் ரத்தினசிறி விக்கிரமநாயக்க விலகியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது அரசாங்கக்குழுவின் தலைவராக சிரேஷ்ட அமைச்சர் ரத்தினசிறி விக்கிரமநாயக்க நியமிக்கப்பட்டிருந்தார். அவரது தலைமையில் இருதரப்பும் நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தன.
ஆயினும் அண்மையில் வெளிவந்திருந்த ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையை ஆதரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் அமைச்சர் ரத்தினசிறி கடும் அதிருப்தியுற்றுள்ளார்.
இலங்கை இராணுவத்தினர் யுத்தக் குற்றம் புரிந்துள்ளதாக தெரிவித்துள்ள அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள, அதற்கு ஆதரவு தெரிவிக்கும் ஒரு கட்சியுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள தன்னால் முடியாது என்றும் அவர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.
அதன் காரணமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடான பேச்சுவார்த்தைக்குழுவில் இருந்து அவர் விலகிக் கொண்டுள்ளார். அவரது வெற்றிடத்துக்கு பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது அரசாங்கக்குழுவின் தலைவராக சிரேஷ்ட அமைச்சர் ரத்தினசிறி விக்கிரமநாயக்க நியமிக்கப்பட்டிருந்தார். அவரது தலைமையில் இருதரப்பும் நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தன.
ஆயினும் அண்மையில் வெளிவந்திருந்த ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையை ஆதரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் அமைச்சர் ரத்தினசிறி கடும் அதிருப்தியுற்றுள்ளார்.
இலங்கை இராணுவத்தினர் யுத்தக் குற்றம் புரிந்துள்ளதாக தெரிவித்துள்ள அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள, அதற்கு ஆதரவு தெரிவிக்கும் ஒரு கட்சியுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள தன்னால் முடியாது என்றும் அவர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.
அதன் காரணமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடான பேச்சுவார்த்தைக்குழுவில் இருந்து அவர் விலகிக் கொண்டுள்ளார். அவரது வெற்றிடத்துக்கு பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
priyanka- மட்டுறுத்துனர்
Similar topics
» அரசாங்கத்துக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்குமிடையிலான கலந்துரையாடல் நாளை
» தோ்தல் கண்காணிப்புச் செயற்பாடுகள் அரசாங்கத்துக்கெதிரான சதி: அமைச்சர் மோ்வின் சில்வா
» மட்டக்களப்பு மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: அமைச்சர் பசில் ராஜபக்ஷ
» வேட்பு மனுத்தாக்கல் செய்யச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முகவர் தீவகப் பகுதியில் கடத்தப்பட்டுள்ளார்
» மட்டக்களப்பின் வெள்ள நிவாரண மீளாய்வுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு இல்லை
» தோ்தல் கண்காணிப்புச் செயற்பாடுகள் அரசாங்கத்துக்கெதிரான சதி: அமைச்சர் மோ்வின் சில்வா
» மட்டக்களப்பு மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: அமைச்சர் பசில் ராஜபக்ஷ
» வேட்பு மனுத்தாக்கல் செய்யச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முகவர் தீவகப் பகுதியில் கடத்தப்பட்டுள்ளார்
» மட்டக்களப்பின் வெள்ள நிவாரண மீளாய்வுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு இல்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|