அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சர்வதேச சமூகத்துடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது – லங்காதீப

Go down

சர்வதேச சமூகத்துடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது – லங்காதீப  Empty சர்வதேச சமூகத்துடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது – லங்காதீப

Post by VeNgAi Sun May 01, 2011 7:47 pm

சர்வதேச சமூகத்துடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என லங்காதீப பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் பெரும் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்தப் பிரச்சினை தொடர்பில் விரிவாக ஆராய வேண்டுமென லங்காதீப குறிப்பிட்டுள்ளது.

போர் ஆரம்பமான காலம் முதல் இரண்டு தரப்பினராலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமையை மறுக்க முடியாது.

இவ்வாறு இடம்பெற்ற மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் தோண்டித் தோண்டி விசாரணை நடத்துவதில் எவருக்கும் நன்மை கிட்டாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போரினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கே அரசாங்கமும், ஐக்கிய நாடுகள் அமைப்பும் முனைப்பு காட்ட வேண்டுமே தவிர, தமிழ் சிங்கள சமூகங்களுக்கு இடையில் மீளவும் பிளவினை ஏற்படுத்தக் கூடிய முயற்சிகள் மேற்கொள்ளப்படக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிபுணர் குழு அறிக்கை தொடர்பான சர்ச்சையின் போது அரசாங்கம் பொறுமையுடனும், நிதானத்துடனும் செயற்பட வேண்டியது மிகவும் இன்றியமையாதது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்கம் உணர்ச்சிவசப்படுவதனை விடவும் நிதானமாக செயற்பட வேண்டியது மிகவும் முக்கியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த இராஜதந்திர அணுகுமுறைகளின் மூலம் சிக்கல் நிலைமையிலிருந்து மீள வாய்ப்பிருப்பதாக லங்காதீப ஆசிரியர் தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழர்கள் மீது பாசம் பொத்துக் கொண்டு வரும்
» வட-கிழக்கு மக்களின் காணி அனுமதிப்பத்திர பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்-அடைக்கலநாதன் எம்.பி _
» இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை கொண்டு வர ஐரோப்பிய நாடுகள் முயற்சி – சார்லி மகேந்திரன்
» பொதுமக்கள் வேண்டுகோள் எனும் பெயரில் தூக்குத் தண்டனையை மீண்டும் அமுலுக்குக் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை?
» இலங்கை விவகாரத்தை சிக்கலாக்காதீர்! சர்வதேச சமூகத்திடம் சீனா வலியுறுத்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum