அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என ஐ.நா. பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்!- திருமாவளவன் கோரிக்கை

Go down

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என ஐ.நா. பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்!- திருமாவளவன் கோரிக்கை  Empty இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என ஐ.நா. பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்!- திருமாவளவன் கோரிக்கை

Post by VeNgAi Sun May 01, 2011 7:53 pm

இலங்கையில் ராஜபக்ச தலைமையில் நடத்தப்பட்டது இனப்படுகொலைச் சம்பவம் என அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா.வுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேசப் போர்க்குற்றவாளி ராஜபக்சவைக் கைது செய்யக் கோரியும், ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை குறித்து விவாதிக்க இந்தியா நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய திருமாவளவன்,

இலங்கையில் படுகொலை நடந்து முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தாமதமாக அறிக்கை வெளியிட்டாலும், உண்மையான அறிக்கையை வெளியிட்ட ஐ.நா.சபை முடிவை வரவேற்கிறோம். வெறும் போர்க்குற்றம் என்று மட்டும் பார்க்காமல், இனப்படுகொலை என்று அறிவிக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் அவசரமாக கூட்டி, ஐ.நா. சபை அறிக்கை குறித்து விவாதிக்க வேண்டும். ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இலங்கையை ஆதரிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இலங்கையை இந்தியாவும் ஆதரிக்கக் கூடாது. என்றார் திருமாவளவன்.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் - அமெரிக்க சட்டவாதிகள் கோரிக்கை
» சகல மக்களினதும் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் அதிகாரப் பரவலாக்கல் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்: ஆஸி.பாராளுமன்ற உறுப்பினர்
» ஈழத்துரோகிகளை அடையாளம் காணவேண்டும் - வைகோ கோரிக்கை
» இலங்கையில் அடைக்கலம் தேடும் பாகிஸ்தானிய யுவதிகள்
» இலங்கையில் இனவாத அடிப்படையில் அரசியல் முன்னெடுக்கப்படுகிறது – நவரட்ன பண்டார

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum