அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

திருகோணமலையில் விமானப்படை வீரர் தற்கொலை

Go down

திருகோணமலையில் விமானப்படை வீரர் தற்கொலை  Empty திருகோணமலையில் விமானப்படை வீரர் தற்கொலை

Post by kaavalan Mon May 02, 2011 4:27 pm

திருகோணமலை மொறவெவ விமானப்படைத் தளத்தில் கடமையாற்றி வந்த விமானப்படை வீரரொருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கண்டிப் பகுதியை சேர்ந்த பி.கே.சமிந்த குமார என்பவரே இவ்வாறு பலியானவர் ஆவார்.

கடமையிலிருந்த இவர் தனது காதலியுடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த வேளையில் தன்னைத்தான் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இவர் பயன்படுத்திய தொலைபேசியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவரின் சடலத்தை பார்வையிட்ட திருகோணமலை நீதிமன்ற நீதவான், சடலத்தை அவரின் உறவினர்கள் பார்வையிட்ட பின்னர் சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் இவரது சடலம் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மொறவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum