அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் - அமெரிக்க சட்டவாதிகள் கோரிக்கை

Go down

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் - அமெரிக்க சட்டவாதிகள் கோரிக்கை Empty இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் - அமெரிக்க சட்டவாதிகள் கோரிக்கை

Post by MayA Sat Dec 18, 2010 11:22 am

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச தரத்தைக்கொண்ட விசாரணைகளை முன்னெடுக்கப்படவேண்டும் என அமெரிக்க சட்டவாக்க உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிங்டனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள 17 செனட்சபை உறுப்பினர்களும் பிரதிநிதிகள் சபையை சேர்ந்த 30 பேரும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்

இதேவேளை இந்த போர்க்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்து வரும் விசாரணைகளை அமெரிக்கா அவதானிக்கவேண்டும் என்றும் அமெரிக்க சட்டவாக்க உறுப்பினர்கள் கோரியுள்ளனர்

இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் போர்க்குற்ற ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு சமாந்தரமாக சர்வதேச விசாரணைகளும் இடம்பெறுவதாக ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்த வேண்டும் என அவர்கள் கேட்டுள்ளனர்

எந்த ஒரு, குற்றங்களும் உறுதிப்படுத்தப்படாவிட்டால், அங்கு நம்பிக்கை மற்றும் உண்மை தன்மை இல்லாது போவதாக ஜனநாயக கட்சியின் ஒஹியோ பிராந்திய செனட் சபை உறுப்பினரான செரொட் பிரௌன், மற்றும் வட கரோலினா மாநில செனட் சபை உறுப்பினர் ரிச்சட் பர் ஆகியோர் இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்

உண்மைத்தன்மை இல்லாத நிலையில் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு சமாதான முயற்சியும் தோல்வியடையும் என்பதே வரலாறு என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் இலங்கையிலும் மற்றும் ஒரு சமாதான தோல்வி ஏற்படுவதை ஏற்கமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளனர்.

இதனைத் தவிர, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில், இலங்கையின் விசாரணைகளில் உண்மை தன்மை குறித்து அமெரிக்கா வலியுறுத்தல்களை விடுக்கவேண்டும் என சட்டவாக்காளர்கள் மற்றும் ஒரு கடிதத்தில் கோரியுள்ளனர்

இந்த கோரிக்கையை விடுத்துள்ள ஜனநாயக கட்சியின் டெனி டேவிஷ் மற்றும் ஜேன் சக்கோஸ்கி ஆகியோர் சிக்காக்கோவில் தமிழ் சமூகம் வாழும் இடத்தை பிரதிநிதித்துவப்படுத்துவர்களாவர்
ஏற்கனவே ஜனாதிபதி ஒபாமாவின் நிர்வாகமும் இலங்கை அரசாங்கம், தமது நியாயத்தன்மையையும் நல்லிணக்கத்தையும் சர்வதேச ஒத்துழைப்புடன் ஏற்படுத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
MayA
MayA
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics
» போர்க்குற்றம் தொடர்பில் சுயாதீன விசாரணை வேண்டும் - அமெரிக்க செனட் யோசனை நிறைவேற்றம்
» பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் கால்வாயிலிருந்து மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணை வேண்டும் - கரு ஜயசூரிய கோருகிறார்
» இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான புகைப்படங்கள் சில….
» இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அறிக்கை! உறுப்பு நாடுகளுக்கு பான் கீ மூன் கோரிக்கை
» இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் புதிது புதிதாக வெளியாகும் ஆதாரங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum