அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அமைச்சர் டக்ளஸை கைது செய்யக் கோரிய மனு: விசாரணைக்கு ஏற்றது சென்னை

Go down

அமைச்சர் டக்ளஸை கைது செய்யக் கோரிய மனு: விசாரணைக்கு ஏற்றது சென்னை  Empty அமைச்சர் டக்ளஸை கைது செய்யக் கோரிய மனு: விசாரணைக்கு ஏற்றது சென்னை

Post by Admin Wed Dec 22, 2010 4:21 am

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யவேண்டும் என கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
தமிழக மக்கள் உரிமை கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் புகழேந்தி என்பவர், இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

1984ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் அவர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்பதை சுட்டிக்காட்டி அவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில் யாரும் ஆஜராகாததால் இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் மனுதாரர் மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று வழக்கு விசாரணையை புத்தாண்டு விடுமுறைக்கு பின்னர் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
»  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி: சென்னை உயர்நீதிமன்றில் தெரிவிப்பு
» 20 ஆண்டுகளாக தேடப்பட்ட இலங்கை பெண் சென்னை விமான நிலையத்தில் கைது
» ஜயலத் தாக்கப்பட்ட சம்பவம்: பாராளுமன்றில் இன்று விசாரணைக்கு சபாநாயகர் அழைப்பு
» என் மகனை என்னிடம் ஒப்படையுங்கள்: சென்னை விமான நிலையத்தில் விஜயகுமாருடன் நடிகை வனிதா தகராறு ; இருவரும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்
» அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஈழத்தமிழருக்குச் செய்த வரலாற்றுத் துரோகங்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum