அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யாழ்ப்பாணத்தில் வெள்ளை வானில் சுற்றியவர்கள் கைது

Go down

யாழ்ப்பாணத்தில் வெள்ளை வானில் சுற்றியவர்கள் கைது Empty யாழ்ப்பாணத்தில் வெள்ளை வானில் சுற்றியவர்கள் கைது

Post by theepan Wed Feb 16, 2011 5:49 am

வெள்ளை வானில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ஐவரை நேற்றிரவு யாழ்ப்பாணப் பிரதேசத்தில் வைத்துப் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியிலேயே நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரே இவர்களை கைதுசெய்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் தப்பியோடிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்குப் பின்புறமாகவுள்ள வீதிவழியாக வந்துகொண்டிருந்த மேற்படி வெள்ளை வானை மறித்து சோதனையிட்ட பொலிஸார், அதில் பயணம் செய்த மேற்படி ஐவரையும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.

பொலிஸார் தம்மை நோக்கி வருவதைக் கண்ட அவர்களில் ஒருவர் வானிலிருந்து இறங்கி தப்பியோடிவிட்டதாகவும், அவரைத் தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» நிபுணர்குழு அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் வெள்ளை அறிக்கை
» யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை வெடிபொருட்களுடன் லொறியொன்று கைப்பற்றப்பட்டுள்ளது
» யாழ்ப்பாணத்தில் கட்டிளம் யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
» யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களின் நடத்தை குறித்து அதிருப்தி
» யாழ்ப்பாணத்தில் இருந்தும் செஞ்சிலுவைச் சங்கம் வெளியேறியுள்ளது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum