அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யாழ்ப்பாணத்தில் கட்டிளம் யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

Go down

யாழ்ப்பாணத்தில் கட்டிளம் யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது Empty யாழ்ப்பாணத்தில் கட்டிளம் யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

Post by rajeshwary Wed Feb 16, 2011 8:09 pm

யாழ்ப்பாணத்தில் கட்டிளம் பருவ யுவதியொருவரின் இன்று அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.யாழ். பாடசாலையொன்றின் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவியொருவர் இன்று அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்திலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பிரஸ்தாப மாணவிக்கு பத்தொன்பது வயது தான் ஆகியுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரஸ்தாப மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அப்படியாயின் அதற்கான காரணம் என்ன? அல்லது வேறு யாராலும் கொலை செய்யப்பட்டுள்ளாரா என்பது குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
rajeshwary
rajeshwary
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum