அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

டைரக்டர் பாலாவின் படத்தில் நடித்தது எனக்கு பெருமை: அவன் இவன் பட நடிகை மதுசாலினி

Go down

டைரக்டர் பாலாவின் படத்தில் நடித்தது எனக்கு பெருமை: அவன் இவன் பட நடிகை மதுசாலினி Empty டைரக்டர் பாலாவின் படத்தில் நடித்தது எனக்கு பெருமை: அவன் இவன் பட நடிகை மதுசாலினி

Post by theepan Thu Feb 17, 2011 6:32 am

தமிழில் பழனியப்பா கல்லூரி, பதினாறு ஆகிய படங்களில் நடித்த மதுசாலினி, டைரக்டர் பாலாவின் 'அவன் இவன்' படத்தில் நடித்துள்ளார்.

தெலுங்கு படமொன்றில் நடிக்கும் போதே டைரக்டர் சபாபதி சாரை தெரியும். பதினாறு படத்தில் பக்கத்துக்கு வீட்டு பெண் மாதிரியான ரோலில் நடிக்க வைத்திருப்பார்.

காதலில் உறுதிகாட்டும் பெண், தனது பெற்றோரின் முடிவிற்காக காத்திருக்கும் கதை அழகாக அதில் சொல்லியிருப்பார். பதினாறு படத்தின் ஹீரோ சிவா, செட்டில் வேடிக்கையாக பேசி சிரிக்க வைப்பார். பட யூனிட்டுக்கும் அது ரிலாக்ஸாக இருந்தது.

சினிமா பீல்டில் கடும் போட்டிக்கு மத்தியில் எனக்கு நடிக்க 'ஸ்கோப்' உள்ள ரோல்கள் கிடைப்பதை அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன். டைரக்டர் பாலா இயக்கும் 'அவன் இவன்' படத்தில் நடித்ததை நினைத்தால் பெருமையாக உள்ளது.

என் கனவு பலித்தது, பாலா சார் செட்டில் அமைதியாக படத்தை இயக்குவார். எல்லோரும் அடுத்து அவர் என்ன சொல்லப்போறார் என்பதை கவனமாக கேட்க, ரெடியாக இருப்பார்கள்.

அவர் படத்தில் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. அவன் இவன் படத்தில் என் ரோல் பற்றி மட்டும் இப்போது என்னால் கூறமுடியாது என்கிறார் மதுசாலினி.

ஒரு நடிகைக்கு அழகு,நிறம் ஆகியவற்றையும் தாண்டி நடிப்பு திறமை மிகவும் முக்கியம் என்பதற்கு உதாரணமாக பழம்பெரும் நடிகையர் சாவித்திரி,சரோஜா தேவி ஆகியோரை சொல்லியிருக்கிறாராம்.

theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum