அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யுத்தக்குற்றங்கள் தொடர்பாக ஆராய நாம் இங்கு வரவில்லை: ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றக்குழுத் தலைவி

Go down

யுத்தக்குற்றங்கள் தொடர்பாக ஆராய நாம் இங்கு வரவில்லை: ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றக்குழுத் தலைவி  Empty யுத்தக்குற்றங்கள் தொடர்பாக ஆராய நாம் இங்கு வரவில்லை: ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றக்குழுத் தலைவி

Post by kaavalan Fri Feb 25, 2011 1:27 am

இலங்கையில் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக ஆராய தாம் இங்கு வரவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றக்குழுத் தலைவி வவுனியாவில் தெரிவித்துள்ளார்.
தமது வருகையின் நோக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வடக்கு மக்களுக்காக வழங்கப்பட்ட நிதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அவற்றின் மூலம் மக்களுக்குக் கிடைக்கும் பலன்கள் குறித்து ஆராய்வது மட்டுமே என்பதாகவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள், மீள்குடியேற்றப்படவுள்ள மக்கள் ஆகிய இருதரப்பினரையும் பார்வையிட்ட ஐரோப்பிய பாராளுமன்றப் பிரதிநிதிகள், அந்த மக்களுக்குக் கிடைக்கும் வசதிகள், சுகாதார வசதிகள் என்பன குறித்தும் ஆராய்ந்துள்ளனர்.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» புலிகளின் மகளிர் அணி தலைவி தமிழினிக்கு மே 9 வரை விளக்கமறியல் நீடிப்பு
» இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை கொண்டு வர ஐரோப்பிய நாடுகள் முயற்சி – சார்லி மகேந்திரன்
» இலங்கை இராணுவத்தினர் என்ன மனிதர்களா இல்லை அரக்கர்களா? நாம் புலிப்பால் குடித்த பரம்பரை - விஜய்
» போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராய நவநீதம்பிள்ளை விரைவில் கொழும்பு வர இலங்கை அரசு அனுமதி
» போர் நடைபெற்ற பகுதிகளில் மேலதிக இராணுவப் பிரசன்னம் குறித்து கோத்தபாயவுடன் பேசினோம் - ஐ.ஒன்றிய குழு தலைவர் ஜீன் லம்பேர்ட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum