அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் தொடர்பான கனேடிய அரசாங்கத்தின் புதிய சட்டமூலத்திற்கு எதிர்ப்பு வலுக்கின்றது

Go down

சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் தொடர்பான கனேடிய அரசாங்கத்தின் புதிய சட்டமூலத்திற்கு எதிர்ப்பு வலுக்கின்றது  Empty சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் தொடர்பான கனேடிய அரசாங்கத்தின் புதிய சட்டமூலத்திற்கு எதிர்ப்பு வலுக்கின்றது

Post by kaavalan Fri Feb 25, 2011 1:33 am

சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் தொடர்பில் கனேடிய அரசாங்கம் புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள சீ-49 சட்டமூலத்திற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சி உள்ளிட்ட பல தரப்பினரும் கடும் ஆட்சேபத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
உத்தேச சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்குமாறு கனேடியப் பிரதமர் விடுத்த வேண்டுகோளையும் எதிர்க்கட்சிகள் கூட்டாக நிராகரித்துள்ளன. பிரஸ்தாப சட்டமூலம் வினைத்திறன் அற்றதும், அரசியலமைப்பிற்கு முரணானதாகவும் அமைந்திருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

உத்தேச சட்டமூலத்தின் பிரகாரம் அகதிகளை ஏற்றிக் கொண்டு வரும் எந்தவொரு கப்பல் மற்றும் விமானத்தையும் சட்டவிரோதமானது என்று பிரகடனப்படுத்த கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்படும். அவ்வாறு சட்டவிரோதமாக நாட்டினுள் பிரவேசிப்பவர்கள் ஒரு வருட காலம் வரை தடுத்து வைக்கப்படவும் சட்டம் வழி செய்கின்றது.

இந்நிலையில் கனடாவின் முக்கிய எதிர்க்கட்சிகளான லிபரல் கட்சி மற்றும் தேசிய ஜனநாயகக் கட்சி என்பனவும் இன்னும் பல சமூக சேவை அமைப்புகளும் பலத்த எதிர்ப்பை வெளிக்காட்டத் தொடங்கியுள்ளன.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum