அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யாழ்ப்பாணத்தில் இருந்தும் செஞ்சிலுவைச் சங்கம் வெளியேறியுள்ளது

Go down

யாழ்ப்பாணத்தில் இருந்தும் செஞ்சிலுவைச் சங்கம் வெளியேறியுள்ளது  Empty யாழ்ப்பாணத்தில் இருந்தும் செஞ்சிலுவைச் சங்கம் வெளியேறியுள்ளது

Post by kaavalan Fri Feb 25, 2011 1:52 am

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அலுவலகம் இன்று தொடக்கம் நிரந்தரமாக மூடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே வன்னி மற்றும் மன்னார் மாவட்டங்களிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது நடவடிக்கைகளை இடைநிறுத்திக் கொண்டு, அலுவலகங்களையும் பூட்டிக் கொண்டு வெளியேறியிருந்தது.

அவ்வாறான நிலையில் இன்று தொடக்கம் அதன் யாழ்ப்பாண கிளை அலுவலகம் உட்பட யாழ். மாவட்டத்தில் இயங்கி வந்த அனைத்து அலுவலகங்களும் நிரந்தரமாக மூடப்படவுள்ளதுடன், அதன் ஊழியர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் காலங்களில் கொழும்பில் இருந்தபடி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகள் வழமை போன்று தொடரும் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ். மாவட்ட உதவிப் பொறுப்பாளர் புளோரன்ஸ் ஜெனட் தெரிவித்துள்ளார்.

யாழ். அலுவலகங்கள் மூடப்பட்டமைக்கான காரணத்தை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவிக்காத போதிலும், அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகவே வட பகுதியில் இயங்கிய அதன் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இன்று யாழ். அலுவலகங்களுடம் மூடப்பட்ட பின் வட பகுதியில் செஞ்சிலுவைச் சங்க அலுவலகம் ஒன்று கூட இயங்கப் போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» யாழில் ஜனாதிபதியை ஆதரித்து ஆர்ப்பாட்டப் பேரணி! பல பாகங்களில் இருந்தும் மக்கள் படையினரால் பேருந்துகளில் ஏற்றி வரப்பட்டனர்
» யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை வெடிபொருட்களுடன் லொறியொன்று கைப்பற்றப்பட்டுள்ளது
» யாழ்ப்பாணத்தில் கட்டிளம் யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
» யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களின் நடத்தை குறித்து அதிருப்தி
» யாழ்ப்பாணத்தில் வெள்ளை வானில் சுற்றியவர்கள் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum