அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அரசியல் கள நிலவரங்கள் குறித்து சம்பந்தனுடன் சென்னையில் த.கூட்டமைப்பு மந்திராலோசனை

Go down

அரசியல் கள நிலவரங்கள் குறித்து சம்பந்தனுடன் சென்னையில் த.கூட்டமைப்பு மந்திராலோசனை  Empty அரசியல் கள நிலவரங்கள் குறித்து சம்பந்தனுடன் சென்னையில் த.கூட்டமைப்பு மந்திராலோசனை

Post by kaavalan Fri Feb 25, 2011 1:53 am

எதிர்வரும் முதலாம் திகதி இடம்பெறவுள்ள அரசு - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உபகுழுக் கூட்டத்தில் ஆராயப்பட வேண்டிய விடயங்கள் மற்றும் தற்போதைய அரசியல்கள நிலவரங்கள் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் கடந்த வாரம் சென்னையில் இடம்பெற்றது.

சென்னையில் வைத்திய சிகிச்சை காரணமாக தங்கியுள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுடன் உப குழுவில் இடம்பெறும் ஏனைய உறுப்பினர்கள் இந்த மந்திராலோசனையில் பங்கு கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி கனகேஸ்வரன் ஆகியோரே இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.

இதுவரை அரசுடன் இடம்பெற்ற பேச்சுக்கள் தொடர்பாக குழுவினர் சம்பந்தனுக்கு விளக்கமளித்தனர்.

அடுத்தகட்டப் பேச்சுக்களில் கூட்டமைப்பு முன்வைக்க வேண்டிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இழுத்தடித்துச் செல்லாமல் எதிர்வரும் மே, ஜூன் மாதங்களுக்குள் பேச்சை முடித்துக்கொள்ள வேண்டும் என்பதில் கூட்டமைப்பு உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» படகு மூலம் அவுஸ்திரேலியா செல்லவிருந்த இலங்கை தமிழ் அகதிகள் சென்னையில் கைது
» பார்வதியம்மாவின் மறைவுக்கு வைகோ, ராமதாஸ் ஆகியோர் இரங்கல்! நாளை சென்னையில் அஞ்சலி கூட்டம்
» தமிழ் அரசியல் தலைமைகளினால் முற்றாக கைவிடப்பட்டுள்ள நிலையினை உணர்கின்றோம்!: அம்பாறை மாவட்ட தமிழர்கள்
» இலங்கையில் இனவாத அடிப்படையில் அரசியல் முன்னெடுக்கப்படுகிறது – நவரட்ன பண்டார
» புதிய தமிழ் அரசியல் கூட்டணி உருவாக்க முயற்சி - திவயின

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum