அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தாம் பதாதை ஏந்தாத நாட்டுப்பற்றாளர்: கரு ஜெயசூரிய பதில்

Go down

தாம் பதாதை ஏந்தாத நாட்டுப்பற்றாளர்: கரு ஜெயசூரிய பதில் Empty தாம் பதாதை ஏந்தாத நாட்டுப்பற்றாளர்: கரு ஜெயசூரிய பதில்

Post by VeNgAi Wed Dec 08, 2010 2:06 am

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் கரு ஜெயசூரிய, வார இறுதி ஆங்கில பத்திரிகையான தெ ஐலண்டுக்கு வழங்கிய செவ்வி தொடர்பாக, அரசாங்கம் நேற்று முன்வைத்த குற்றச்சாட்டுக்கு கரு ஜெயசூரிய இன்று பாராளுமன்றத்தில பதிலளித்துள்ளார்.

படையினரின் போர்க்குற்றம் அல்லது புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்பில் தாம் அந்த பத்திரிகைக்கான செவ்வியின் போது எதனையும் குறிப்பிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த பத்திரிகையே பிழையான செய்தியை வழங்கியுள்ளதாக கரு ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுப்பற்றாளர் என்ற பதாதையை ஏந்தியில்லாதபோதும் தாம் நாட்டுப்பற்றுடனேயே செயற்படுவதாக கரு ஜெயசூரிய தெரிவித்தார்.

இலங்கை மீது எந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டாலும் அதற்கு உரிய பதிலை வழங்கவேண்டும் என்றே தாம் பத்திரிகைக்கு தெரிவித்திருந்ததாக கரு ஜெயசூரிய குறிப்பிட்டார்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜெயவர்தனவிற்கு எதிராக நாடாளுமன்ற தெரிவிக்குழுவை அமைக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த கோரிக்கை இன்று நாடாளுமன்றத்தில் வைத்து ஆளும் கட்சினரால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக தமிழீழ விடுதலைப்புலி ஆதரவாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஜயலத் ஜயவர்தன பங்கேற்றார் என குற்றம் சுமத்தியே இந்த கோரிக்கையை அரசாங்க தரப்பு விடுத்துள்ளது.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum