அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

புலிகளின் சர்வதேச கட்டமைப்பு தொடர்பாக இலங்கை அமைச்சர் கவலை தெரிவிப்பு

Go down

புலிகளின் சர்வதேச கட்டமைப்பு தொடர்பாக இலங்கை அமைச்சர் கவலை தெரிவிப்பு Empty புலிகளின் சர்வதேச கட்டமைப்பு தொடர்பாக இலங்கை அமைச்சர் கவலை தெரிவிப்பு

Post by theepan Tue Mar 01, 2011 3:27 pm

புலிகளின் சர்வதேச கட்டமைப்பு தொடர்பாக இலங்கை அமைச்சர் கவலை தெரிவிப்பு Mahinda_samarasinghe

பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு குற்றச் செயல்களில் ஈடுபடுவது குறித்து ஜெனீவாவில் நேற்று ஆரம்பித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் பேசிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க தனது கவலையை வெளிப்படுத்தினார்

அத்துடன், புலிகளின் எஞ்சியுள்ள சர்வதேச வலையமைப்புக் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கும்படி உலக நாடுகளை அவர் கேட்டுக்கொண்டார்.
புலி ஆதரவுக் குழுக்கள், உதவியாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சில வெளிநாட்டு அரசுகள் செயற்படுகின்றன என்று குறிப்பிட்ட அமைச்சர், இந்தக் குழுக்களின் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் குறித்தும் எச்சரிக்கை விடுத்தார்.
அமைச்சர் தனது பேச்சின் போது, இறைமை உள்ள நாடுகளுக்கு அச்சுறுத்தலாக எழக்கூடிய பயங்கரவாதத்தைத் தடுப்பது குறித்து உலக நாடுகள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார் என கூட்டத்தொடரில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
போருக்குப் பின்பான இலங்கை குறித்துப் பேசிய போது, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்தும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதிகளவானவர்கள் தமது சாட்சியங்களையும் அளிப்பதற்கு ஆவலாக இருந்ததன் காரணத்தால் ஆணைக்குழுவின் செயற்பாட்டுக் காலம் நீடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அவசரகாலச் சட்டம் படிப்படியாக பொருத்தமான தருணங்களில் நீக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக ஜெனீவா சென்றிருந்த அமைச்சர் சமரசிங்க கடந்த வெள்ளிக்கிழமை, ஐ.நா. மனித உரிமைகள் சபை ஆணையாளர் நவநீதம்பிள்ளையைச் சந்தித்துக் கலந்துரையாடி இருந்தார்.
நேற்று உரையாற்றும் போது, ஐ.நா. மனித உரிமைகள் சபையுடனும் ஏனைய சர்வதேசப் பங்காளிகளுடனும் காத்திரமான பேச்சுக்களை நடத்துவதற்கு இலங்கை எதிர்பார்த்திருக்கிறது என்றார் அமைச்சர் மஹிந்த சமரசிங்க.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
»  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி: சென்னை உயர்நீதிமன்றில் தெரிவிப்பு
» விடுதலைப் புலிகளின் நிழல் பாராளுமன்றத்தில் இன்னும் படிந்துள்ளது: அமைச்சர் ஜகத் புஷ்பகுமார
» இலங்கை விவகாரத்தை சிக்கலாக்காதீர்! சர்வதேச சமூகத்திடம் சீனா வலியுறுத்தல்
» த. தே கூட்டமைப்புடனேயே இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கான இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும். - த.தே.ம முன்னணி
» சரத் பொன்சேகாவுக்கு எதிரான தீர்ப்பை ஆராய சர்வதேச பாராளுமன்ற ஒன்றியப் பிரதிநிதி இலங்கை வரவுள்ளார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum