அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அரசாங்கத்துக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்குமிடையிலான கலந்துரையாடல் நாளை

Go down

அரசாங்கத்துக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்குமிடையிலான கலந்துரையாடல் நாளை  Empty அரசாங்கத்துக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்குமிடையிலான கலந்துரையாடல் நாளை

Post by priyanka Wed Mar 02, 2011 1:24 pm

அரசாங்கம் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கிடையிலான அதிகாரப் பகிர்வு தொடர்பான கலந்துரையாடல் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்குப் பிரதேசத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என்று ஜனாதிபதி மாளிகை வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

பிரஸ்தாப கலந்துரையாடலின் போது 13வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு அரசாங்கத்தைக் கோர தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் அதன் போது கலந்துரையாட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது. ஆயினும் அரசாங்கம் அவ்வாறான கோரிக்கைகளுக்கு இணங்காது என்றே தெரிய வருகின்றது.

அதற்கிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மேலதிகமாக நாளைய கலந்துரையாடலில் பங்கு கொள்ளுமாறு புளொட் அமைப்புக்கும் அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
priyanka
priyanka
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொழும்பு மாநகர மேயர் வேட்பாளராக மனோ கணேசன் களமிறங்கவுள்ளார்
» தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கருத்துக்களால் அதிருப்தியுற்று கலந்துரையாடல் குழுவிலிருந்து அமைச்சர் ரத்தினசிறி விலகல்
» அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் மிகப்பெரிய சொத்து நாளை பறிபோகின்றது
» பார்வதியம்மாவின் மறைவுக்கு வைகோ, ராமதாஸ் ஆகியோர் இரங்கல்! நாளை சென்னையில் அஞ்சலி கூட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum