கணக்குமிகுதியை காட்டும் கிரடிட் கார்டுகள் அறிமுகம்
Page 1 of 1
கணக்குமிகுதியை காட்டும் கிரடிட் கார்டுகள் அறிமுகம்
இன்றைய தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. அந்த வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கிரடிட் கார்ட் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கிரடிட் கார்டில் அப்படி என்ன தான் விசேடம் என்று கேட்டால், இந்த வகை கிரடிட் கார்டில் ஒரு திரை உண்டு. அதில் கணக்கு மிகுதியை காட்டும்.
மிக மெல்லிய நுண்செயலியுடன் கூடிய இந்த கிரடிட் அட்டை பெட்டரி(மின்கலம்) மூலம் இயங்குகிறது. இந்த பெட்டரிகள்(மின்கலம்) 3 வருடம் வரை நீடித்த பாவணை கொண்டதாம்.
இந்த புதிய வகை கிரடிட் கார்டை அதன் சொந்தக்காரருக்கு மாத்திரமே பயன்படுத்தக்கூடிய வகையில் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. புதிய கிரடிட் கார்டின் வருகைக்குப் பின்னர் இனிமேல் கிரடிட் கார்ட் கொள்ளையர்களுக்கு இலகுவாக பணத்தை திருட முடியாதாம்.
அதாவது தனிப்பட்ட இரகசிய குறியீட்டை வழங்கிய பின்னரே இதன் திரை செயற்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதே வேளை "சிடி வங்கி" புதிய வகை 2ஜி கார்டை வெளியிட்டுள்ளது. இது காந்த அமைப்பு கொண்டது.
இதில் பொத்தான்கள் அமைந்துள்ளன. உலகளாவிய ரீதியில் 1.7 பில்லியன் மக்கள் கிரடிட் கார்டை பாவிக்கிறார்களாம்.
thadcha- உறுப்பினர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|