படகுகளைத் திருடிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாண இளைஞர் தமிழ்நாட்டில் கைது
Page 1 of 1
படகுகளைத் திருடிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாண இளைஞர் தமிழ்நாட்டில் கைது
தமிழ்நாட்டின் தனுஷ்கோடியில் மீனவர்களின் படகுகளைத் திருடிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாண இளைஞரொருவர் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனுஷ்கோடி கரையோரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் இரு படகுகளையே அவர் திருடியுள்ளயதாக கியூ பிராஞ்ச் பொலிசாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மண்டபம் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இளைஞரொருவர் நடமாடித் திரிவதாக பொலிசாருக்குக் கிடைத்த தகவலையடுத்து பிரஸ்தாப வாலிபர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார்.
அதன் போது அவர் யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த ரவிநாத் என்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போதே அவர் தமிழக மீனவர்களின் படகுகளைத் திருடிய விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தமிழகத்தைச் சோ்ந்த இன்னும் சிலரின் உதவியுடனேயே அவர் தனுஷ்கோடியில் மீனவர்களின் படகுகளைத் திருடியுள்ளார். அவற்றில் ஒன்று உடைந்த நிலையில் மண்டபம் பகுதியிலும், மற்றொன்று நடுக்கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் எதற்காக அவர் படகுகளைத் திருடினார் என்பது குறித்து எதுவித தகவல்களும் வெளியாகவில்லை.
அத்துடன் பிரஸ்தாப ரவிநாத் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததும் தெரிய வந்துள்ளது. எப்போது இந்தியாவுக்கு வந்தார் என்பது குறித்து சரியான தகவல்கள் இல்லை. மேலும் அவர் இதுவரை அகதி அந்தஸ்துக் கோரியும் விண்ணப்பித்திருக்கவில்லை. அது குறித்தும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தனுஷ்கோடி கரையோரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் இரு படகுகளையே அவர் திருடியுள்ளயதாக கியூ பிராஞ்ச் பொலிசாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மண்டபம் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இளைஞரொருவர் நடமாடித் திரிவதாக பொலிசாருக்குக் கிடைத்த தகவலையடுத்து பிரஸ்தாப வாலிபர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார்.
அதன் போது அவர் யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த ரவிநாத் என்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போதே அவர் தமிழக மீனவர்களின் படகுகளைத் திருடிய விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தமிழகத்தைச் சோ்ந்த இன்னும் சிலரின் உதவியுடனேயே அவர் தனுஷ்கோடியில் மீனவர்களின் படகுகளைத் திருடியுள்ளார். அவற்றில் ஒன்று உடைந்த நிலையில் மண்டபம் பகுதியிலும், மற்றொன்று நடுக்கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் எதற்காக அவர் படகுகளைத் திருடினார் என்பது குறித்து எதுவித தகவல்களும் வெளியாகவில்லை.
அத்துடன் பிரஸ்தாப ரவிநாத் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததும் தெரிய வந்துள்ளது. எப்போது இந்தியாவுக்கு வந்தார் என்பது குறித்து சரியான தகவல்கள் இல்லை. மேலும் அவர் இதுவரை அகதி அந்தஸ்துக் கோரியும் விண்ணப்பித்திருக்கவில்லை. அது குறித்தும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|