அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

வட-கிழக்கு மக்களின் காணி அனுமதிப்பத்திர பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்-அடைக்கலநாதன் எம்.பி _

Go down

வட-கிழக்கு மக்களின் காணி அனுமதிப்பத்திர பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்-அடைக்கலநாதன் எம்.பி _	 Empty வட-கிழக்கு மக்களின் காணி அனுமதிப்பத்திர பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்-அடைக்கலநாதன் எம்.பி _

Post by VeNgAi Mon Apr 04, 2011 9:18 am

வட கிழக்கு மாகாணத்தில் பல ஆண்டு காலமாக வாழ்ந்து வரும் மக்களுக்கு அவர்களுடைய காணிக்குரிய அனுமதிப்பத்திரங்கள் பல ஆண்டு காலமாக வழங்கப்படாமல் இருப்பது தொடர்பாகவும் இவ் விடயத்தில் உடன் நடவடிக்கை எடுக்குமாறும் கூறி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜானக்க பண்டார தென்னக்கோனின் கவனத்திற்கு கொண்டுவரும் முகமாக கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

தங்களின் கவனத்திற்கு கொண்டு வரும் விடயம் யாதெனில்,வட- கிழக்கு மாகாணத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மக்களுக்கு அவர்களுடைய காணிகளுக்குரிய அனுமதிப்பத்திரங்கள் பல ஆண்டுகாலங்களாக வழங்கப்படாமல் இருக்கின்றது.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் புனர்வாழ்வு வேலைத்திட்டங்களின் கீழ் அனுமதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு எந்த வித உதவிகளும் வழங்கப்படவில்லை. குறிப்பாக வீட்டு மானியம் மற்றும் வீட்டுக்கடன் போன்றவை வழங்கப்படவில்லை.இந்த துக்ககரமான நிலையில் ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இதற்குரிய தீர்வை எவரும் இதுவரை முன்வைக்கவில்லை. எனவே இந்த விடயத்தை அவசரமாக பரிசீலனை செய்து உடன் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு மேற்படி கடிதத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டிருந்தார். _
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics
» வடக்கு கிழக்கு மக்களின் பிரதிநிதிகளாக த.தே.கூட்டமைப்பை அரசு ஏற்கவேண்டும் - அமைச்சர் வாசுதேவ
» த. தே கூட்டமைப்புடனேயே இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கான இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும். - த.தே.ம முன்னணி
» வடக்கு மக்களின் கல்வியறிவே இலங்கை சர்வதேச ரீதியில் நிர்ணயம்செய்ய காரணமானது – கிழக்கு கல்வி பணிப்பாளர் நிஸாம்
» வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீக தாயகம்! தமிழர்களுக்கான உரிமை கிடைக்கும் வரை த.தே. கூட்டமைப்பு தொடர்ந்து குரல் கொடுக்கும்! மேதின உரையில் அரியநேத்திரன்
» செல்வம் அடைக்கலநாதன் பா.உ. பயணித்த வாகனம் தலைமன்னாரில் விபத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum