மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகள் இடம்பெற வேண்டும்! அமைச்சர் வாசுதேவ உத்தரவு
Page 1 of 1
மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகள் இடம்பெற வேண்டும்! அமைச்சர் வாசுதேவ உத்தரவு
சகல அரச மற்றும் தனியார்துறை நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் இடம்பெறவேண்டும். இவ்வாறு தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அரச மற்றும் தனியார் நிறுவனங்களிடம் உத்தரவு விடுத்துள்ளார்.
குறைந்தபட்சம் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் கட்டாயம் இடம்பெறச் செய்யவேண்டும். ஏனெனில் சில தனியார் நிறுவனங்களில் ஆங்கிலத்தில் மட்டும் பெயர்ப்பலகைகள் தொங்கவிட்டிருப்பதை நான் கண்ணுற்றேன். அது தவறு. எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளதாவது:
கொழும்பு நகரின் சில இடங்களில் பிழையாக பெயர்ப் பலகைகள் காணப்படுகின்றன.
சில பெயர்ப்பலகைகள் ஆங்கிலத்தில் மாத்திரமே காணப்படுகின்றன.
இதனால், பொதுமக்கள் இவற்றைப் புரிந்துகொள்ள முடியாமல் பெரும் இன்னல்களை எதிர்நோக்குகின்றனர்.
எனவே, இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
குறைந்தபட்சம் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் கட்டாயம் இடம்பெறச் செய்யவேண்டும். ஏனெனில் சில தனியார் நிறுவனங்களில் ஆங்கிலத்தில் மட்டும் பெயர்ப்பலகைகள் தொங்கவிட்டிருப்பதை நான் கண்ணுற்றேன். அது தவறு. எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளதாவது:
கொழும்பு நகரின் சில இடங்களில் பிழையாக பெயர்ப் பலகைகள் காணப்படுகின்றன.
சில பெயர்ப்பலகைகள் ஆங்கிலத்தில் மாத்திரமே காணப்படுகின்றன.
இதனால், பொதுமக்கள் இவற்றைப் புரிந்துகொள்ள முடியாமல் பெரும் இன்னல்களை எதிர்நோக்குகின்றனர்.
எனவே, இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
kaavalan- முக்கிய பிரமுகர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|