ஷங்கர் ஹீரோக்களுக்கு போட்ட ரூல்ஸ்
Page 1 of 1
ஷங்கர் ஹீரோக்களுக்கு போட்ட ரூல்ஸ்
டைரக்டர் கே.வி.ஆனந்த்தின் இயக்கத்தில் 'கோ' படத்தில் நடித்திருக்கும் ஜீவா, 'சிங்கம் புலி' படத்திற்காக ஹீரோ-வில்லன்-காமெடியன் என மூன்று பரிமாணங்களில் நடித்துள்ளார்.
ஜீவா பேசுகையில் 'சிங்கம்புலி படத்தில் டபுள் ரோலில் வருகிறேன். ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து சந்தானத்துடன் இணைந்து காமெடியும் பண்ணியிருக்கேன்.
தோற்றம் ஒன்றாக இருந்தாலும் 'பாடி லாங்க்வேஜை' மாற்றி சும்மா பின்னியிருக்கேன். நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டியிருக்கேன். ப்ளேபாய் ரோலில் நாயகி சௌந்தர்யாவுடன் ரொமான்ஸ் பாடல் காட்சியில் நெருக்கமாக நடித்துள்ளேன்.
அந்த பாடல் காட்சி 'மிட்நைட் மசாலா' மாதிரி வந்திரக்கூடாது என்பதில் நானும் டைரக்டர் சாய் ரமணியும் ரொம்ப கவனமாக இருந்து 'வல்காரிட்டியை' தவிர்த்துள்ளோம். இன்னொரு நாயகி திவ்யா ஸ்பந்தனாஸ் உடன் பக்குவப்பட்ட 'ரொமான்ஸ்' காட்சியில் நடித்துள்ளேன் என்று கூறும் ஜீவா தற்போது 'வந்தான் வென்றான்' நண்பன் படங்களில் நடித்து வருகிறார்.
ரௌத்ரம் படமும் அவருக்காக காத்திருக்கிறது. டைரக்டர் ஷங்கர் சாரின் 'நண்பன்' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. உலகநாயகன் கமல், சூப்பர் ஸ்டார் ரஜினி போன்ற பெரிய ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கியவர், எங்களையும் சரிசமமாக நடத்தினார்.
அவருடன் பணியாற்றுவது சிரமமில்லாத ஒன்றாக இருந்தது. செட்டில் எந்தவித கடுமையான ரூல்ஸையும் போட்டு அழுத்தவில்லை. இதுவரை என்னை வைத்து படம் பண்ணிய இயக்குனர்களை போலவே நடந்து கொண்டார்.
காட்சிகளை தெளிவாக விளக்கி கூறி,தயக்கமின்றி நடிப்பை வாங்கினார். ஷங்கர் சாரின் இயக்கத்தில் இந்தி 'த்ரீ இடியட்சை' விட 'நண்பன்' அட்டகாசமாக வரும் என்றாராம் ஜீவா.
ஜீவா பேசுகையில் 'சிங்கம்புலி படத்தில் டபுள் ரோலில் வருகிறேன். ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து சந்தானத்துடன் இணைந்து காமெடியும் பண்ணியிருக்கேன்.
தோற்றம் ஒன்றாக இருந்தாலும் 'பாடி லாங்க்வேஜை' மாற்றி சும்மா பின்னியிருக்கேன். நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டியிருக்கேன். ப்ளேபாய் ரோலில் நாயகி சௌந்தர்யாவுடன் ரொமான்ஸ் பாடல் காட்சியில் நெருக்கமாக நடித்துள்ளேன்.
அந்த பாடல் காட்சி 'மிட்நைட் மசாலா' மாதிரி வந்திரக்கூடாது என்பதில் நானும் டைரக்டர் சாய் ரமணியும் ரொம்ப கவனமாக இருந்து 'வல்காரிட்டியை' தவிர்த்துள்ளோம். இன்னொரு நாயகி திவ்யா ஸ்பந்தனாஸ் உடன் பக்குவப்பட்ட 'ரொமான்ஸ்' காட்சியில் நடித்துள்ளேன் என்று கூறும் ஜீவா தற்போது 'வந்தான் வென்றான்' நண்பன் படங்களில் நடித்து வருகிறார்.
ரௌத்ரம் படமும் அவருக்காக காத்திருக்கிறது. டைரக்டர் ஷங்கர் சாரின் 'நண்பன்' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. உலகநாயகன் கமல், சூப்பர் ஸ்டார் ரஜினி போன்ற பெரிய ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கியவர், எங்களையும் சரிசமமாக நடத்தினார்.
அவருடன் பணியாற்றுவது சிரமமில்லாத ஒன்றாக இருந்தது. செட்டில் எந்தவித கடுமையான ரூல்ஸையும் போட்டு அழுத்தவில்லை. இதுவரை என்னை வைத்து படம் பண்ணிய இயக்குனர்களை போலவே நடந்து கொண்டார்.
காட்சிகளை தெளிவாக விளக்கி கூறி,தயக்கமின்றி நடிப்பை வாங்கினார். ஷங்கர் சாரின் இயக்கத்தில் இந்தி 'த்ரீ இடியட்சை' விட 'நண்பன்' அட்டகாசமாக வரும் என்றாராம் ஜீவா.
theepan- தலைமை நடத்துனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|