வீரத்தாய்
Page 1 of 1
வீரத்தாய்
தள்ளாடி தளர்ந்த தோள்
தசை இன்றி சுருங்கிய தோல்
பருத்தி பஞ்சாக பறந்திருந்த வெண்நிற முடி
பாலை நீர்போல வட்டிகிடகும் உந்தி
குழிந்து கிடக்கும் கன்னம் ......
வயோதிகம் அவளை கட்டி அணைத்திருந்தது...........
இயம்பினார்கள் .....
கடுகளமாடிய உன் மகன்
படைக்கு பயந்து புறமுதுகிட்டான் என்று .....
வெகுண்டாள்
கொதிதேளுந்தாள்......
சிறுத்தை போல் சீறி போர்க்களம் போக தயராகினாள்
கொலையை என் மகன் களம் நீக்கி இருந்தால் கொய்வேன்
அவனுக்கு பால் பகர்ந்த கொங்கையை என்றாள்
எடுத்த வாளோடும்
உரைத்த சுளொடும்....
சுடுகாடான களத்தில் ...
தேடினாள் பிணங்களை
ஒருகையில் வாள் ஏந்தி ..
பிடி கூட நழுவாமல் .....
பூமித்தாய் மடி மேலே மார்பு மீள் அம்பு பட்டு
மல்லாக கிடந்தான் மகன் .....
நின்றிருந்த முச்சு
வந்தது பேரு மூச்சாய் தயவளுக்கு
அன்று
குறை இல்லா மகவாய் பிறந்தது ஆனந்தம்
இன்று
பகை கண்டு மண்ணுக்காய் மறைந்தது பேரானந்தம் .....
என்றாள் இந்த தாய் ......
thadcha- உறுப்பினர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|