அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

வாழைச்சேனை, முஸ்லிம் பாடசாலை மதிற்சுவரை உடைத்ததாக பௌத்த விகாரை நிர்வாகத்தின் மீது புகார்

Go down

வாழைச்சேனை, முஸ்லிம் பாடசாலை மதிற்சுவரை உடைத்ததாக பௌத்த விகாரை நிர்வாகத்தின் மீது புகார் Empty வாழைச்சேனை, முஸ்லிம் பாடசாலை மதிற்சுவரை உடைத்ததாக பௌத்த விகாரை நிர்வாகத்தின் மீது புகார்

Post by priyanka Wed Dec 08, 2010 1:54 am

வாழைச்சேனை, பிரைந்துரைச்சேனை ஸ்ரீ புத்த ஜெயந்தி விகாரை நிர்வாகத்தினால், அஸ்ஹர் வித்தியாலயத்தின் 80 மீற்றர் நீளமான எல்லை மதில் சுவர் இன்று செவ்வாய்க்கிழமை உடைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி சங்க தலைவரும் அதிபருமாகியய எம்.எஸ்.சுபையிதீன் மற்றும் செயலாளர் எம்.யூ.ஏ.அலீம் ஆகியோரினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பாடசாலை 1970ஆம் ஆண்டு ஆரம்பித்தது முதல் வெற்றிடமாக இருந்த இடத்தை 1981ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடமையாற்றிய பிரதேச செயலாளரிடம் கேட்டுக் கொண்டதிற்கிங்க பாடசாலை விளையாட்டு மைதானத்திற்காக அரச காணி என்று கூறி இதனை அவர் ஒப்படைத்திருந்தார்.

இதனை பிரைந்துரைச்சேனை சாதுலியா பாடசாலை மாணவர்களும் அஸ்ஹர் பாடசாலை மாணவர்களும் தங்களது விளையாட்டு நிகழ்வுகளுக்காக பயன்படுத்தி வந்தனர்.

இந்த விளையாட்டு மைதானத்திற்கான மதில் மற்றும் கிறவல் இடுவதற்கு 2000ஆம், 2001ஆம், 2002ஆம் காலப்பகுதியில் பிரதியமைச்சராக இருந்த முஹைதீன் அப்துல் காதர் நிதி ஒதுக்கீடு செய்திருந்ததாக அப்பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த மாதம் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.ஜவாஹிர் சாலி இக்கானி விடயம் சம்பந்தமான பிணக்கினை தீர்த்து தரும் படி கோரிக்கை ஒன்றை முன் வைத்திருந்தார்.

இதேவேளை விகாரைக்கு ஏற்கனவே அரசாங்கத்தால் வழங்கப்பட்ட காணிக்கான பத்திரத்தின் படி காணியை மதிப்பீடு செய்து விகாரைக்குரிய காணியை அடையாளமிடுமாறு கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலாளருக்கு கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டி.டி.அனுர தர்மதாஸா அறிவித்துள்ளர்.

இதன் வேலைகள் பூர்த்தியடையும் முன்பே விகாரை நிர்வாகம் இன்று மாலை மைதானத்தை மூடி முள்கம்பி வேலி அமைத்ததுடன் எல்லை மதிலையும் உடைத்துள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவிக்கின்றது.

ஸ்ரீ புத்த ஜெயந்தி விகாரையின் தேரர் தங்களது விகாரைக்கு சொந்தமான காணியினை பாடசாலை நிர்வாகம் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருவதாகவும் அதனை மீட்டுத் தரும்படியும் கோரி கடந்த மாதம் விகாரைக்கு முன்பாகவுள்ள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
priyanka
priyanka
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» தங்காலையில் ஜனாதிபதியின் குண்டர்கள் முஸ்லிம் வாக்காளர்களை ஆயுத முனையில் மிரட்டல்
» வவுனியாவில் பாடசாலை அதிபர்களை மிரட்டும் பாதுகாப்பு படையினர்
» சிங்கள மொழியில் தேசியகீதம் பாடுவதற்கு யாழ். பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சி - நாமல் தலைமையில் ஆரம்பம்
» வவுனியா முகாம் அகதிகளுக்கான உணவுப்பொருட்கள் கடத்தப்படுவதாக புகார்
» தமிழர்கள் மீது பாசம் பொத்துக் கொண்டு வரும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum