மஹிந்த ராஜபக்ச மதவாத பிடியில் சிக்கியுள்ளார் - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்
Page 1 of 1
மஹிந்த ராஜபக்ச மதவாத பிடியில் சிக்கியுள்ளார் - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை போன்று, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், தமது நாடுகளில் இருக்கின்ற மதவாத சக்திகளின் பிடியில் சிக்கியுள்ளமை புலனாவதாக, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தவிசாளர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கர் தெரிவித்துள்ளார்.
உலக சமாதானம் மற்றும் ஒருமைப்பாட்டுக்காக ஜனாதிபதி ஒபாமாவுக்கு கிடைத்த, மிகச் சிறந்த வாய்ப்பையும், யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கை சமூகத்தில் நிலையான ஒற்றுமையை ஏற்படுத்த கிடைத்த சந்தர்ப்பத்தையும் இருவருமே தவறவிட்டுள்ளதாக பாக்கீர் மாக்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கையில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதாக கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது கருத்துக்களுக்கு மாறாக தற்போது அவர் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உட்பட்ட தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழியில் பாடப்பட்டு வந்த தேசிய கீதத்துக்கு தடை விதிக்கப்பட்டு சிங்கள மொழியில் பாடுவதற்கு பணிக்கப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது என பாக்கீர் மாக்கார் குறிப்பிட்டுள்ளார்
உலக சமாதானம் மற்றும் ஒருமைப்பாட்டுக்காக ஜனாதிபதி ஒபாமாவுக்கு கிடைத்த, மிகச் சிறந்த வாய்ப்பையும், யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கை சமூகத்தில் நிலையான ஒற்றுமையை ஏற்படுத்த கிடைத்த சந்தர்ப்பத்தையும் இருவருமே தவறவிட்டுள்ளதாக பாக்கீர் மாக்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கையில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதாக கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது கருத்துக்களுக்கு மாறாக தற்போது அவர் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உட்பட்ட தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழியில் பாடப்பட்டு வந்த தேசிய கீதத்துக்கு தடை விதிக்கப்பட்டு சிங்கள மொழியில் பாடுவதற்கு பணிக்கப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது என பாக்கீர் மாக்கார் குறிப்பிட்டுள்ளார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|