*~*நடிகைகளுக்கு தாசரி நாராயணராவ் கண்டனம் *~*
Page 1 of 1
*~*நடிகைகளுக்கு தாசரி நாராயணராவ் கண்டனம் *~*
நடிகைகளுக்கு தாசரி நாராயணராவ் கண்டனம்
தமிழ் நடிகைகள் கடை திறப்பு விழாவில் பங்கேற்க ரூ. 15 லட்சம் வரை வாங்குகின்றனர். தெலுங்கு நடிகைகளும் இதே தொகை கேட்கிறார்கள். இந்தி நடிகைகள் ரூ. 1 கோடி வரை கேட்கின்றனர். நடிகைகளின் இந்த செயலுக்கு பிரபல தயாரிப்பாளர் தாசரி நாராயணராவ் கண்டனம் தெரிவித்தார். ஐதராபாத்தில் 'வம்சி' விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் விருதுகள் பெற நடிகைகள் யாரும் வரவில்லை. இவ்விழாவில் தாசரி நாராயணா பங்கேற்று பேசியதாவது:- கதாநாயகிகள் சினிமாவில் சம்பாதிக்கின்றனர். அதோடு துணி கடை, நகை கடைகள் திறப்பு விழாக்களுக்கும் போகிறார்கள். அதற்கும் பணம் வாங்கிக் கொள்கின்றனர். ஆனால் இது போன்ற விருது வழங்கும் விழாக்களுக்கு அழைத்தால் வருவது இல்லை. இது போன்ற நடிகைகள் மீது திரையுலகினர் கண்டிப்பாக இருக்க வேண்டும். பணத்துக்காக கடை திறப்பு விழாக்களுக்கு செல்லும் கதாநாயகிகளை புறக்கணிக்க வேண்டும். திரைப்பட விழாக்களுக்கு அவர்களை அழைக்கக் கூடாது. சினிமா துறையில் தங்களுக்கும் பங்கு இருக்கிறது என்பதை நடிகைகள் உணர்வது இல்லை. இவ்வாறு அவர் பேசினார். சரியான சாட்டையடின்னா அது இதுதாங்க......
Tamilkings- உறுப்பினர்
Similar topics
» தமிழக மீனவர் சிறைப்பிடிப்பு - இலங்கைக்கு மன்மோகன் சிங் கண்டனம்
» தமிழ்மக்களிற்கு எதிராக தொடரும் குற்றங்களை தடுத்து நிறுத்த சர்வதேச கண்டனம் தேவை
» தமிழ்மக்களிற்கு எதிராக தொடரும் குற்றங்களை தடுத்து நிறுத்த சர்வதேச கண்டனம் தேவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|