அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யாழ் கடல் எல்லையில் மேலும் 24 இந்திய மீனவர்கள் கைது

Go down

யாழ் கடல் எல்லையில் மேலும் 24 இந்திய மீனவர்கள் கைது Empty யாழ் கடல் எல்லையில் மேலும் 24 இந்திய மீனவர்கள் கைது

Post by theepan Fri Feb 18, 2011 6:12 am

யாழ் கடல் எல்லையில் கைதுசெய்யப்பட்ட மேலும் 24 இந்திய மீனவர்கள் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.யாழ், இளவாலை, பிரதேசத்தில் இருந்து கடலுக்கு சென்ற இலங்கை மீனவர்கள் குறித்த இந்திய மீனவர்கள் சுற்றிவளைக்கப்பட்டு மாதகல் கரையோரத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களுடன் ஏழு ட்ரோலர் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக பிரதிப். பொலிஸ்மா அதிபர் ஒருவர் குறித்த பிரதேசத்திற்குச் சென்றுள்ளார்.

தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் தெல்லிப்பளை சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தமை காரணமாக இதற்கு முன்னர் கைதுசெய்யப்பட்ட 112 இந்திய மீனவர்களும் நேற்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» யாழ்.பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த தமிழக மீனவர்கள் 108 பேர் கைது
» குருநகர் மற்றும் வல்வெட்டித்துறை மீனவர்கள் இந்திய மீனவர்களினால் சிறைப்பிடிப்பு
» கடற்படையினரின் ஒத்துழைப்புடனேயே இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் நடப்பதாக குடாநாட்டு மீனவர்கள் குற்றச்சாட்டு
» இந்திய அணியின் வெற்றிக்கு பட்டாசு கொழுத்திய யாழ். வர்த்தகர்கள் மீது வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum