ரந்தம்பையில் மின்மாற்றியொன்று வெடித்துள்ளது
Page 1 of 1
ரந்தம்பையில் மின்மாற்றியொன்று வெடித்துள்ளது
மகாவலி நீர்மின்வலு நிலையமான ரந்தம்பையில் மின்மாற்றியொன்று வெடித்துச் சிதறியதில் அங்கு பணியாற்றிய மின்சார சபை ஊழியர்கள் மூவர் காயமடைந்துள்ளனர்.
ரந்தம்பை நீர்த்தேக்கத்தை ஒட்டியதாக அமைக்கப்பட்டிருக்கும் நீர்மின்வலு நிலையத்தில் இச்சம்பவம் இன்று பிற்பகல் நடைபெற்றுள்ளது. மின்மாற்றி வெடித்தபோது குண்டுவெடிப்பையொத்த பலத்த சப்தம் அப்பகுதியில் கேட்டுள்ளது.
பிரஸ்தாப வெடிப்புச் சம்பவம் காரணமாக மின் அத்தியட்சகர் ஒருவர் உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். தற்போது அவர்கள் மஹியங்கனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களின் உடம்பு பூராகவும் தீக்காயங்கள் காணப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மின்மாற்றி வெடிப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
ரந்தம்பை நீர்த்தேக்கத்தை ஒட்டியதாக அமைக்கப்பட்டிருக்கும் நீர்மின்வலு நிலையத்தில் இச்சம்பவம் இன்று பிற்பகல் நடைபெற்றுள்ளது. மின்மாற்றி வெடித்தபோது குண்டுவெடிப்பையொத்த பலத்த சப்தம் அப்பகுதியில் கேட்டுள்ளது.
பிரஸ்தாப வெடிப்புச் சம்பவம் காரணமாக மின் அத்தியட்சகர் ஒருவர் உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். தற்போது அவர்கள் மஹியங்கனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களின் உடம்பு பூராகவும் தீக்காயங்கள் காணப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மின்மாற்றி வெடிப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
theepan- தலைமை நடத்துனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|