அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பாகிஸ்தானுடனான போட்டியில் இலங்கை தோல்விக்குக் காரணம் கிரிக்கட் சூதாட்டம்?: அரச தொலைக்காட்சி தரும் அதிரடித் தகவல்

Go down

பாகிஸ்தானுடனான போட்டியில் இலங்கை தோல்விக்குக் காரணம் கிரிக்கட் சூதாட்டம்?: அரச தொலைக்காட்சி தரும் அதிரடித் தகவல் Empty பாகிஸ்தானுடனான போட்டியில் இலங்கை தோல்விக்குக் காரணம் கிரிக்கட் சூதாட்டம்?: அரச தொலைக்காட்சி தரும் அதிரடித் தகவல்

Post by theepan Mon Feb 28, 2011 10:04 pm

பாகிஸ்தானுடனான போட்டியில் இலங்கை தோல்விக்குக் காரணம் கிரிக்கட் சூதாட்டம்?: அரச தொலைக்காட்சி தரும் அதிரடித் தகவல் Cricket_pakistan001

உலகக் கிண்ணத் தொடருக்காக நடைபெறும் கிரிக்கட் போட்டிகளில் பாகிஸ்தானுடனான போட்டியில் சூதாட்டம் காரணமாகவே இலங்கை தோல்வியைத் தழுவியதாக அரச தொலைக்காட்சியான ஐ.டி.என் அதிரடித் தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியின் பிரதான ஊடக ஆலோசகரும், அரசாங்க தினமின பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான மஹிந்த அபேசிங்க ஐ.டி.என் செய்திகளின் பின்னால் "விமசும" என்றொரு செய்திப் பார்வையை நாளாந்தம் எழுதிக் கொடுக்கின்றார்.
அதன் நேற்றைய ஒளிபரப்பில் பாகிஸ்தானுடனான போட்டியில் இலங்கையின் தோல்விக்கு கிரிக்கட் சூதாட்டம் காரணமாக இருக்கலாம் என்றவாறாக ஊகித்தக்க வகையில் செய்திப் பார்வை ஒளிபரப்பப்பட்டிருந்தது.
அதிலும் குறிப்பாக மஹேல ஜயவர்தன மற்றும் திலான் சமரவீர ஆகியோர் மீதே அந்தக் குற்றச்சாட்டைச் சுமத்தும் வகையில் செய்திப் பார்வையின் பிரதி எழுதப்பட்டிருந்தது.
அரசாங்கத்தின் பிரதம ஊடக ஆலோசகரின் பிரதியாக்கத்தில், அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி என்பதால் குறித்த குற்றச்சாட்டை அலட்சியமாக ஒதுக்கி விடமுடியாதுள்ளது.
ஆயினும் கிரிக்கட்டும் அரசியல் மயமாகிப் போயுள்ள நிலையில் தோல்வியைத் தாங்க முடியாத அரசாங்கம் இவ்வாறான அபாண்டங்களைச் சுமத்தும் முயற்சியில் இறங்கியிருப்பதாக விளையாட்டு விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எது எப்படியாயினும் இவ்வாறான குற்றச்சாட்டுகள் விளையாட்டு வீரர்களின் மனோநிலையைப் பாதித்து விடும் என்பது மட்டும் உண்மை.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை அரசாங்கத்தின் பிடிவாதக்கொள்கையில் மாற்றம்! ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவுள்ளது
» இலங்கை இந்தியாவுக்கு எதிராக செயற்படாது - இலங்கை அரசாங்கம்
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» இலங்கையின் முக்கியத் தினசரிப் பத்திரிகையொன்றை கே.பி. கையகப்படுத்தப் போகின்றார்?: தமிழுக்கு ஒளி தொலைக்காட்சி உரிமையாளரும் கூட்டு
» இலங்கையில் கொள்ளையடிப்பவர்கள் தான் கோடீஸ்வரர்கள்: புதிய ஆய்வில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum