அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஓமந்தை தடுப்புக்காவல் முகாம் இன்று தொடக்கம் மூடப்படுகின்றது

Go down

ஓமந்தை தடுப்புக்காவல் முகாம் இன்று தொடக்கம் மூடப்படுகின்றது  Empty ஓமந்தை தடுப்புக்காவல் முகாம் இன்று தொடக்கம் மூடப்படுகின்றது

Post by kaavalan Mon May 02, 2011 4:28 pm

ஓமந்தையில் இயங்கி வந்த இராணுவத்தினரின் தடுப்புக் காவல் முகாம் இன்று முதல் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
ஓமந்தை மத்திய மகா வித்தியாலயத்தில் பிரஸ்தாப தடுப்புக் காவல் முகாம் இயங்கி வந்த நிலையில், முகாம் மூடப்படுவதன் காரணமாக பாடசாலைக்கட்டிடம் மீண்டும் அதன் அதிபரிடம் உத்தியோகபூர்வமாக இன்று கையளிக்கப்படவுள்ளது.

கடந்த 2009 மே மாதம் தொடக்கம் சுமார் இரண்டு வருடங்கள் வரையில் ஓமந்தை மத்திய மகா வித்தியாலயத்தில் இராணுவத்தினரின் தடுப்புக்காவல் முகாம் இயங்கி வந்திருந்தது.

அங்கிருந்த தடுப்புக்காவல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் அனைவரும் தற்போதைக்கு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளதால், பிரஸ்தாப தடுப்பு முகாம் மூடப்பட்டுள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் அறிவிக்கின்றார்.

ஓமந்தை மத்திய மகா வித்தியாலயத்தின் கல்வி நடவடிக்கைகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் அறிவித்துள்ளார்.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» வவுனியா முகாம் அகதிகளுக்கான உணவுப்பொருட்கள் கடத்தப்படுவதாக புகார்
» இலங்கையில் லஷ்கர் ஈ தைய்பா முகாம்: விக்கிலீக்ஸின் இன்னொரு அதிரடி அம்பலம்
» அம்பாறை மக்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த காஞ்சிரங்குடா அதிரடிப்படை முகாம் மூடப்பட்டுள்ளது
» யாழ்.வலய கல்விப் பணிமனை முன்பாக தொண்டராசிரியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம்
» ஜயலத் தாக்கப்பட்ட சம்பவம்: பாராளுமன்றில் இன்று விசாரணைக்கு சபாநாயகர் அழைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum