அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

போரில் காணாமல் போனவர்களை தேடித் தருவதாக கப்பம் பெற்ற இருவர் வவுனியாவில் கைது

Go down

போரில் காணாமல் போனவர்களை தேடித் தருவதாக கப்பம் பெற்ற இருவர் வவுனியாவில் கைது  Empty போரில் காணாமல் போனவர்களை தேடித் தருவதாக கப்பம் பெற்ற இருவர் வவுனியாவில் கைது

Post by VeNgAi Wed Jan 12, 2011 4:26 am

போரின் போது காணாமல் போன சொந்தங்களை தேடித் தருவதாகத் தெரிவித்து பாரியளவு கப்பப் பணத்தைப் பெற்றுக் கொண்ட இருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த இருவரும் சுமார் பத்து லட்சம் ரூபா வரையில் இவ்வாறு மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி அம்பலங்குளம் பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதான சந்தேக நபர் தமிழீழ விடுதலை புலிகளினால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போரின் போது காணாமல் போனவர்களை கண்டு பிடித்துக் கொடுப்பதற்காக கிளிநொச்சி பிரதேச மக்களிடம் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

காணாமல் போன இளைஞர் ஒருவர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை விடுதலை செய்வதற்கு பெருந்தொகை பணம் செலவிட நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தமிழ் அரசியல் கட்சியொன்றின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics
» அம்பாறையில் கப்பம் பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கைது
» கடந்த ஒரு வருட காலத்துக்குள் கப்பம் கோரியவர்கள் 60 போ் கைது! பதினைந்து கோடி பணம் பாதுகாக்கப்பட்டுள்ளது
» சுவிஸில் உள்ள உணவகத்தில் இலங்கைத் தமிழர்கள் மோதல்! இருவர் காயம், பதினொரு பேர் கைது
» கொழும்பில் இத்தாலிக்கு போலிக் கடவுச்சீட்டு மற்றும் வீசா ஏற்பாடு: தமிழ் இளைஞர்கள் இருவர் கைது
» பொலிஸாரை ஏற்றிவந்த பஸ் மோதியதால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பலி! துப்பாக்கி பிரயோகத்தில் பொதுமக்கள் இருவர் படுகாயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum