அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பார்வதியம்மாவுக்கு கனடியத் தமிழர் தேசிய அவை, இளையோர் அமைப்பின் இரங்கல்

Go down

பார்வதியம்மாவுக்கு கனடியத் தமிழர் தேசிய அவை, இளையோர் அமைப்பின் இரங்கல்  Empty பார்வதியம்மாவுக்கு கனடியத் தமிழர் தேசிய அவை, இளையோர் அமைப்பின் இரங்கல்

Post by Admin Sun Feb 20, 2011 6:32 pm

தமிழீழத் தேசியத் தலைவரின் தாயார் திருமதி. வேலுப்பிள்ளை பார்வதியம்மா இன்று காலை 6.30 மணிக்கு தமிழீழம் வல்வெட்டித்துறையில் தனது 81 வது அகவையில் காலமானார் என்பதனை மிகவும் வேதனையுடன் உலகத் தமிழர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
உலகத் தமிழரை உலகிலே தலை நிமிர வைத்த எங்கள் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களை இத்தரணியிலே ஈன்றெடுத்த புனிதத்தாயின் உயிர் இன்று உலகைவிட்டுச் சென்றாலும் தமிழினம் உள்ளவரை எல்லோருடைய நெஞ்சங்களிலும் என்றுமே வாழ்ந்துகொண்டிருப்பார்.

அன்னாரது குடும்பத்தினருக்கும் பார்வதியம்மாவின் மறைவுச் செய்தி கேட்டுத் தாங்கொணாத் துயரில் ஆழ்ந்திருக்கும் உலகத் தமிழர்களுக்கும் கனடியத் தமிழர் தேசிய அவையினர் தங்களது இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன் தாங்களும் இத்துயரில் பங்குகொள்கின்றனர்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.

கனடியத் தமிழர் தேசிய அவை

தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் மறைந்ததையிட்டு கனடா இளையோர் அமைப்பினரின் இரங்கல்.

பெரும் மதிப்புக்குரிய தமிழீழத் தேசியத்தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் அவர்கள் மறைந்ததையிட்டு கனடா தமிழ் இளையோர் அமைப்பு ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் அடைகின்றது.

தமிழீழ விடுதலைப் பயணத்தை தலைமை தாங்க ஓரு சூரியத்தேவனைப் பெற்றெடுத்த தேசத்தின் தாய் அமரர் பார்வதி அம்மாள் அவர்களுக்கு கனடா தமிழ் இளையோர் அமைப்பு தனது இதய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

ஈழத் தமிழரை அடிமையின் பிடியிலிருந்து விடுவிக்க போராடும் தமிழ் தானைத் தலைவனை பெற்றெடுத்து அவருக்கு வீரமும் விவேகமும் உட்டி வளர்த்த பார்வதி அம்மள் அவர்கள் தேசியத்தலைவரின் இலட்சியப் பயணத்துக்கு வழிகாட்டியாக இருந்திருக்கின்றது.

தேசியத்தலைவரின் பெற்றோர் என்ற காரணத்துக்காக இவரும் இவரது கணவரான அமரர் திருவெங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் சிறிலங்கா அரசின் துன்புறுத்தல்களுக்கு பல ஆண்டுகளாக ஆளாகி வந்திருக்கின்றார்கள்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பின் 7 மாதங்காக முதியவர்கள் என்றும் பாராமல் தேசியத்தலைவரின் பெற்றோராகவும் தமிழர்களாகவும் இருந்த காரணங்களுக்காக சிறிலங்கா அரசின் வதைமுகாமில் வெளித் தொடர்புகளுக்கோஇ மருத்துவ வசதிகளுக்கோ அனுமதிக்கப்படவில்லை.

தேசியத் தாய் அண்மையில் தமிழ் நாட்டில் சிகிற்சையளிக்க அனுமதி மறுக்கப்பட்டு பின்பு தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சரான கரணநிதியால் நிபந்தனைகளுடன் அளித்த பெற்ற அனுமதியை மறுத்தழித்து தனது சொந்த மண்ணான வல்வெட்டித்துறையிலேயே சிகிட்சை பெற்றுவந்தார். இத்தோடு இவரது கணவர் திருவெங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் அண்மையினிலேயே இறைவனடி சேர்ந்தார்.

பாரிசவாத நோயினால் கடுமையான உடல்ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் துன்புறுத்தல்களுக்கு ஆளான நிலையில் இவரது மறைவுச் செய்தி குறிப்பாக உலகெங்கும் வாழும் தமிழ் இளையோர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இவரது பிரிவால் துயரால் வாடும் தேசியத் தலைவருக்கும் அவரது உறவினர்களுக்கும் மற்றும் தமிழீழ மக்களுக்கும் எமது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு அத் துயரத்தில் கனடா இளையோர் அமைப்பும் பங்கெடுத்துக் கொள்கின்றது.

கனடா இளையோர் அமைப்பு
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» பார்வதியம்மாவின் மறைவுக்கு வைகோ, ராமதாஸ் ஆகியோர் இரங்கல்! நாளை சென்னையில் அஞ்சலி கூட்டம்
» 40 வருடகால பேச்சில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தினால் தமிழர் பிரச்சினை தீரும்: மங்கள சமரவீர எம்.பி
» அம்பாறையில் தமிழர் மகா சங்கத் தலைவர் மீது அமைச்சர் நவரட்னராஜா தாக்குதல் நடத்தியுள்ளார்
» தேசிய தலைவரின் தாயார் காலமானார்
» மட்டக்களப்பில் நடைபெற்ற தேசிய பார்வையற்றோர் சம்மேளனத்தின் மகாநாடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum